"சபரிமலை கோவிலின் உள்ளே மனித ரத்தம் தெளித்து, சிறுநீர் கழித்து அசுத்தப் படுத்தி அய்யப்பன் கோயிலை மூட திட்டமிட்டோம்.."
கடவுளை மறுப்பவர்கள் அல்ல, இதைக் கூறியவர்கள். சனாதன தர்மத்தை காக்கப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே!
இப்படி திட்டமிட்டது "கடவுள் இல்லை" என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் இல்லை... சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுத்து, "அய்யப்ப சேவா சங்கம்" என்ற பெயரில் அமைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த ராகுல் ஈஸ்வர் என்ற சபரிமலை தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன் தான் இப்படி செய்ய திட்ட மிட்டவன்...
"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக பெண்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முயன்றால் கோவிலையே இழுத்து மூடும் வகையில் நாங்களும் திட்டமிட்டிருந்தோம். பிளான் Aயின்படி வழி மறித்து போராட்டம். அடுத்து பிளான் B & C யின்படி 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், அவர்களது உடலை அறுத்து சன்னி தானத்தில் இரத்தம் தெளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். இரத்தம் அல்லது மூத்திரம் பெய்து அசிங்கம் செய்வதன் மூலம் மூன்று நாட்களுக்கு சன்னிதானத்தை இழுத்து மூட முடியும். இதையே தொடர்ந்து செய்தால் நீண்ட காலம் சன்னிதானம் பூட்டப்படும் இந்தத் திட்டத்தை அடுத்து வரும் மண்டல பூஜை, மகர விளக்கு காலத்திலும் தொடருவோம்" - ராகுல் ஈஸ்வர்.
No comments:
Post a Comment