Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒன்றிய அரசின் வீண் தாமதம்! நீதித்துறை பணிகள் முடக்கம்: உச்சநீதிமன்றம் பகிரங்கக் குற்றச்சாட்டு
November 29, 2022 • Viduthalai

புதுடில்லி, நவ 29- கொலீஜியம் சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்வதால் நீதித்துறை பணிகள் முடங்கி விட்டதாக உச்ச நீதிமன்றம் குற்றம் சாட் டியது.  உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜி யம் அமைப்பு சிபாரிசு செய்ப வர்களை ஒன்றிய அரசு நிய மித்து வருகிறது. 

சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும் வற்புறுத்திய 3 அல்லது 4 வாரங் களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட் டது. ஆனால், இந்த உத்தரவை பின்பற்றாமல், 'கொலீஜியம்' சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிப் பதில் ஒன்றிய அரசு வேண்டு மென்றே தாமதம் செய்வதாக பெங்களூரு வழக்குரைஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ். ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது. ஒன்றிய அரசு சார்பில் ஆஜ ரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, இந்த பிரச் சினை குறித்து செயலாளர் மட் டத்தில் ஆலோசனை நடத்திய தாகவும், மீண்டும் விவாதித்து விட்டு வருவதாகவும் கூறினார்.

அதற்கு நீதிபதிகள் அவரை பார்த்து கூறியதாவது:- கள நில வரம் என்னவென்றால், கொலீ ஜியம் வற்புறுத்திய பெயர்க ளுக்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு எப்படி நீதித்துறை இயங் கும்? இதுதொடர்பான எங்கள் வேதனையை ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

கடந்த 2015ஆ-ம் ஆண்டு, நீதிபதிகள் நியமனம் தொடர் பான தேசிய நீதித்துறை நிய மன ஆணைய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், மீண்டும் கொலீஜியம் முறை அமலுக்கு வந்தது. அதனால், ஒன்றிய அரசு அதிருப்தி அடைந் தது போல் தோன்றுகிறது. ஆனால், காலதாமதம் செய்வ தற்கு அது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. கொலீஜியம், பணி முதிர்வு அடிப்படையில் நீதிபதிகளை சிபாரிசு செய்கி றது. ஆனால் ஒன்றிய அரசு, கொலீஜியம் சிபாரிசு செய்த நபர்களில் ஒருவருக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கிறது. 

இதனால், பணிமுதிர்வு முழுமையாக அடிபடுகிறது. எல்லை மீறி செல்கிறது கொலீஜியம் சிபாரிசு செய்து விட்டால், அந்த அத்தியாயம் முடிந்ததாக கருத வேண்டும். அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு, நீதித்துறை பணிகளை தடுக்கக்கூடாது. ஒன்றரை ஆண்டாக சில பெயர் கள் நிலுவையில் உள்ளன. இத னால், சிபாரிசு செய்யப்பட்ட சில வழக்குரைஞர்கள், தங்கள் சம்மதத்தை விலக்கிக் கொண்டு விட்டனர். கடந்த 2 மாதங் களாக நீதித்துறை பணிகள் அனைத்தும் முடங்கி விட்டன. 

இதுபோன்று கிடப்பில் போட்டு, ஒன்றிய அரசு எல்லை மீறி செல்கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள், தாங்கள் நினைப் பதை செய்வோம் என்று நினைத் தால், நாங்களும் நாங்கள் நினைப்பதை செய்வோம். நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். சட்டத்தை பின்பற்றுங்கள் சட்டங்கள் இருக்கும்வரை அவற்றை பின் பற்றியே ஆக வேண்டும். இங்கு அட்டார்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் வந்து இருக்கிறார்கள். அவர் கள் இரட்டை குழல் துப்பாக் கியாக செயல்பட வேண்டும். ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன் றம் நிர்ணயித்த காலக்கெடுவை பின்பற்றுமாறு ஒன்றிய அர சுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn