சென்னை நவ 22 தமிழ்நாட்டில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் பாதிப்பு 42 ஆக குறைந்துள்ளது தமிழ்நாட்டில் புதிதாக 21 ஆண்கள், 21 பெண்கள் உள்பட மொத்தம் 42 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் உள்பட மொத்தம் 17 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 12 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 173 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப்புக்குள்ளாகி 449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 406 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 32 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 402 ஆக உள்ளது. கரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,586 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 219.86 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதர அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment