தோழர் து.ராஜா மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு திராவிடர் கழகம் வாழ்த்துகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

தோழர் து.ராஜா மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு திராவிடர் கழகம் வாழ்த்துகிறது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்.)யின் தேசிய பொதுச்செயலா ளராக இரண்டாவது முறையாக தோழர் 

து.ராஜா அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் - விஜயவாடாவில் கூடிய அக்கட்சியின் தேசிய செயற் குழு, பொதுக்குழுக் கூட்டத்தில்!

உழைப்பு, எளிமை, கொள்கை உணர்வு இவற்றால் உயர்ந்துள்ள தோழர் து.ராஜா அவர்கள், சிறந்த நாடாளுமன்றவாதியும் ஆவார்!

நுண்மாநுழைபுலத்துடன் எந்தப் பிரச்சினைப் பற்றியும் சிறப்பாக வாதாடக் கூடிய வல்லமையாளர்!

நாட்டின் ஜனநாயகமும், சமூகநீதியும், மதச்சார் பின்மையும், மதவெறி சக்திகளிடம் சிக்கிக் கொண் டுள்ள நிலையில், அந்தக் கொடுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் பெரும் பணி அக்கட்சிக்கு உண்டு. அதற்குத் தோழர் து.ராஜா போன்றவர்களின் தலைமையும், ஆற்றலும் முக்கியத் தேவையாகும்.

அவருக்கு நமது மகிழ்ச்சியான வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.10.2022

No comments:

Post a Comment