மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்

பல அம்மாக்கள் வீட்டிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுவதால், வெளியுலகத் தொடர்பின்றி மன அழுத்தத்திற்கு உள்ளா கின்றனர். இதைத் தவிர்க்க, வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், பகுதி நேர வேலை செய்யலாம். தற்போது, இதற் கான பல வசதிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிக் கொணரலாம். தாயாக இருப்பது மகிழ்ச்சி நிறைந்தது, பெருமைக்குரியது என்றாலும், வாழ்க்கையில் பொறுப்புகள் நிறைந்த பதவியும் இதுதான். அவற்றை சமாளிக்கும் பக்குவம் இல்லாமல் போகும் போது, மன அழுத்தம் ஏற்படுவது சகஜம். இதனால், பல தாய்மார்கள் பயத்துடனோ அல்லது விரக்திய டைந்த மனநிலையுடனோ இருக்கலாம். இவ்வாறு மன ஆரோக்கியம் பாதிக்காமல் செயல்படுவதற்கு சில வழிகள் உண்டு. அவற்றை தெரிந்துகொள்வோம். 

வீட்டிலேயே இருக்கும் அம்மாக்கள் வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு என நாள் முழுவதும் தங்கள் கடமை எனும் வட்டத்துக்கு உள்ளேயே சுற்றி வருகின்றனர். இதுவே மனச்சோர்வுக்கு காரணமாக அமை யும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்ற னர். எனவே, ஒவ்வொரு நாளையும் உங் களுக்கானதாக மாற்றுவது அவசியம். அன் றாடப் பணிகளுக்கிடையே, உங்களின் தனிப் பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யக் காட்டும் அக்கறைதான், இதற்கான சிறந்த வழி. உங்களின் உடை, சிகை அலங்காரம் உள்பட அனைத்து விஷயங்களிலும், மாற்றத் தைக் கொண்டு வாருங்கள்.

பெண்கள் பலருக்கும், குழந்தை பெற்ற பின்பு நண்பர்களை உருவாக்குவது கடின மாகத் தோன்றலாம். குடும்பப் பொறுப்புகள் இருக்கும்போது, பிறருடன் நட்பை வளர்த்துக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது சிரமமாக இருக்கும். ஆனால், இந்தப் புதிய அறிமுகம், வாழ்வில் பலவற்றை கற்றுக்கொள்வதற்கு வழி செய்யும். வெளியே செல்லுங்கள்: வெளியில் செல்லும்போது, உடல் நலத்துக்குத் தேவையான 'வைட்டமின் டி' சத்தை இயற் கையாவே பெறுவதுடன், உங்களைப் புதுப் பித்த உணர்வையும் பெறுவீர்கள். பூங்கா விலோ, கடற்கரையிலோ நடக்கும்போது, சின்ன விஷயங்களையும் ரசிக்கப் பழகுவது முக்கியம். மனச்சோர்வைத் தவிருங்கள்: பலவற்றையும் மனதிற்குள்ளே அசை போடு வதால் மனஅழுத்தம் அதிகமாகும். 

இது நாளடைவில் மனச் சோர்வாக மாறும். இதைப் போக்குவதற்கு நம்பிக்கைக்கு உரிய வர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பேசப் பிடிக்காத விஷயங்களை ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். இதனால், மனம் லேசாகும். மனச் சோர்வு தினசரி வாழ்க்கையைப் பாதித்தாலோ அல்லது தாங்க முடியாத அளவு உணர்ந் தாலோ மனநல மருத்துவரின் ஆலோச னையை நாடுவதற்குத் தயங்கக்கூடாது.

No comments:

Post a Comment