ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பன்மொழி, பன்மை தன்மை கொண்ட நாட்டில் ஆங்கிலத்தை மறுத்து ஹிந்தியை திணிப்பது உலகத்தின் வாசலை மூடுவது போலாகும், தலையங்க செய்தி.

* உச்ச நீதிமன்றத்தின் 50-ஆம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க சந்திரசூட் பெயர் பரிந்துரை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஆட்சியின் தோல்வியை மறைக்க மோடி அரசு ஹிந்தி பிரச்சினையை கையாள்கிறது, கனிமொழி,எம்.பி. பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 'படிப்பில் சிறப்பாக செயல்பட சரஸ்வதியை மயக்குங்கள்' என உத்தரகாண்ட் ஹல்த்வானியில் மாணவர்களிடம் பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பன்சிதார் பாகத் அறிவுரை.

தி டெலிகிராப்:

* வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கும் தார்மீக தைரியம் பிரதமருக்கு இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சரி டம் சமூக நல்லிணக்க மனித சங்கலியில் பங்கேற்ற கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

 .- குடந்தை கருணா


No comments:

Post a Comment