புதுடில்லி, அக்.24 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 2 ஆயிரத் திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண் ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment