ஜாதிப்பட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

ஜாதிப்பட்டம்

மன்னார்குடி சுயமரியாதைச் சங்க நிர்வாகி களின் கூட்டம் 24.11.1930ஆம் தேதி  கே.ஆர்.ஜி.பால் அவர்களின் அறையில் நடைபெற்றது. அது  சமயம் பல அங்கத்தினர்கள் வந்திருந்தனர். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேறியது. தன் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரை வைத்துக் கொள்ளுதல் - சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாதலால் அப்படி வைத்துக் கொள்ளும் அங்கத்தினர்களுக்கு காலணா வீதம் அபராதம் செலுத்த வேண்டு மென்றும் தீர்மானித்தனரென கே.ஆர்.ஜி.பால் எழுதுகிறார். 

- குடிஅரசு, 7.12.1930


No comments:

Post a Comment