தேசியக் கல்விக் கொள்கை: டில்லியில் அமல்படுத்த முடியாது துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

தேசியக் கல்விக் கொள்கை: டில்லியில் அமல்படுத்த முடியாது துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா!

புதுடில்லி, செப்.12 இந்தியாவிற் கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த குழுவானது தேசிய கல்விக் கொள்கை 2020க்கான வரைவு அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் சமர்ப் பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால், ஏராளமான கல்வியா ளர்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றிருந்த அம்சங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை யடுத்து, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை ஒன்றிய அரசு இணை யத் தளத்தில் வெளியிட்டது.

தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத் துடன், இதனை செயல்படுத்துவது பற்றி ஒன்றிய அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத் தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கையை இப்போதைக்கு டில்லியில் அமல்படுத்த முடியாது என்று டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டில்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங் கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். அதனால் டில்லியில் இப்போது அதனை அமல்படுத் துவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். கல்வி சார்ந்த விஷயங்களை அனைத்து கோணங் களிலும் அணுக வேண்டும். அந்த வகையில், தேசியக் கல்விக் கொள்கை 2020இல் நிறைய மாற் றங்கள் தேவைப்படுகிறது. சில விஷயங்கள் அதில் இணைக்கப்பட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலும் அதனை நடைமுறைப்படுத்துவதி லும் நிறைய சிக்கல்கள் இருக் கின்றன. அதனால் அதை டில்லி யில் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டில்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டினார். அதன்படி, டில்லி துணை முதல மைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சுமார் 14 மணி நேரம் சிபிஅய் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.டில்லி கல்விக் கொள்கை பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. அதில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரது செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி ஆம் ஆத்மி கட்சிக்கு புகழை தேடித்தந்துள்ளது பிடிக்காததால், மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டில்லி ஆம் ஆத்மி அரசின் கல்விக் கொள்கை பலராலும் பாராட்டப் பட்டு வரும் நிலையில், அதன் பின்னணியில் இருக்கும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, தேசிய கல்விக் கொள்கையில் இடைவெளி இருப்பதாக கூறியுள்ளது கவ னத்தை ஈர்த்துள்ளது.


No comments:

Post a Comment