சென்னை, செப். 14- தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலையில் சென்னை பல்கலைக்கழகம் மெல்போர்ன் பல்கலைக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்ப மிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.வெளிநாட்டு மாணவர்க ளும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடியும். இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரும் நாட்களில் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு மேற்கொள்ளப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment