மண்ணின் மைந்தரிடம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆதிக்கசக்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

மண்ணின் மைந்தரிடம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆதிக்கசக்திகள்

50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடியின சமூக சேவகரும் நடிகை யுமான  சியாச்சான் லிட்டில்பெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணிற்குச் சொந்தமான ஒருவருக்கு 'தேவையற்ற, நியாயமில்லாத அநீதி சியாச் சான் லிட்டில்பெதருக்கு நடந்ததாக ஆஸ் கார் அகாடமி வெளிப்படையாக தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அடக்குமுறைக்கொடுமைகளும் நிறப் பாகுபாடு மற்றும் வர்க்கப்பாகுபாட்டிலும் உழன்று கொண்டு இருந்த காலத்தில் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுவதும் இன்றும் தங்களின்மீது மேற் கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை ஆறாத காயங்களாக ரணங்களை சுமந்து கொண்டு வாழ்கின்றனர். உலகம் மாறிக் கொண்டு வருகிறது. இந்த ரணங்களுக்கு உலகம் அவ்வப்போது மருந்திட்டுக் கொண்டு வருகிறது,  

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் கன டாவில் பூர்வகுடியினரின் குழந்தைகளை அவர்களின் கலாச்சாரத்தை மறக்க தனிமைப்படுத்தி கொடுமைப்படுத்தியதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்தனர். இந்தக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக உலக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருக்கும் போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார். அதே போல் தற்போது அமெரிக் காவிலும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

இந்திய சினிமாக்களில் தீயவர்கள் என்றாலே கறுப்பானவர்களாகவும், லுங்கி கட்டிக்கொண்டும், கரடுமுரடான சொற் களைச் சொல்லிக்கொண்டும், குடிசைப் பகு தியில் வாழ்பவர்களாகவும் ஒழுக்கமில்லாத வர்களாகவும் காண்பிப்பார்கள், தற்போது தென் இந்திய திரைப்படங்களில் முற் போக்குச் சிந்தனை இயக்குநர்கள் வந்து விட்டதால் அந்தப்போக்கு குறைந்து விட்டது. ஆனால் வடஇந்திய திரைப்படங் களில் இன்றும் அந்தப் போக்கு தொடர் கிறது. 

இதே போல் தான் அமெரிக்கப் படங் களிலும் அங்கு வந்தேறிகளான ஸ்பானி யர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஹீரோக் களாகவும் பூர்வகுடி அமெரிக்கர்கள் அசிங்கமானவர்கள், ஏமாற்றுக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் மற்றும் தூய்மை யில்லாமல் சாலைகளில் குடித்து புரள்பவர் களாகவும் காண்பிப்பார்கள்.  50 ஆண்டு களுக்கு முன்பு 'த காட்பாதர்' என்ற ஆங் கிலப்படத்தில் நடித்த கருப்பின நடிகர் மார்லன் பிராண்டோவிற்கு  சிறந்த நடி கருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விருதைப் பெறுவதற்கு மார்லன் பிராண்டோ விரும்பவில்லை.

பூர்வகுடி அமெரிக்கர்களை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி தனக்கு அறிவிக்கப் பட்ட விருதை மார்லன் பிராண்டோ நிரா கரித்தார். அவர் விழா நடக்கும் இடத்திற்கு கூட வரமறுத்துவிட்டார். ஆனால் தான் மறுத்ததற்கான காரணத்தை கூற சக நடிகையான லிட்டில் பெதரை அனுப்பினார். அவரும் எதிர்ப்பு தெரிவித்து பேசி விருதை மறுப்பதற்கு ஆஸ்கர் மேடைக்கு வந்தார். அந்த நிகழ்ச்சி நடந்தது 1973ஆம் ஆண்டு. அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் நேர லையில் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது 26 வயதான சியாச்சான் லிட்டில் பெதர் மேடைக்கு நடந்து செல்லும் போது அரங் கில் இருந்தவர்கள் கேலி செய்தார்கள். மேடையில் விருது வழங்குபவர்களும் கேலியான பார்வையிலேயே பார்த்தனர்.  அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது லிட்டில்பெதருக்கு வயது 75. ஆஸ்கார் விருது குழு அவரிடம் மன்னிப்புக் கோரி யிருப்பது பற்றிக் கேட்டபோது, "இதைக் கேட்கும் நாளைக் காணும் வரையில் நான் வாழ்வேன் என்று ஒருபோதும் நினைக்க வில்லை," என்று அவர் கூறினார். லிட்டில் ஃபெதர். ஆஸ்கர் அகாடமியிடம் இருந்து மன்னிப்புக் கிடைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

ஆஸ்கர் மேடையில் லிட்டில்பெதர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய அந்த 60 நொடிகள் நீடித்த உரை தான் ஆஸ்கர் நேரலையில் பேசப்பட்ட முதல் அரசியல் உரை. அதன் பிறகு இன்று வரைக்கும் ஆஸ்கர் மேடை அவ்வப்போது அரசியல் மேடையாகிவிடுகிறது.

பூர்வகுடி நடிகையைக் கேலி செய்தது ஏன்?

1973ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டபோது மார்லன் பிராண்டோவுக்கு பதிலாக லிட்டில் வரு வதையே பலரும் வியப்போடு பார்த்தார் கள். பூர்வகுடி அமெரிக்கர்களின் உடையில் அவர் வந்திருந்தார்.

காட்பாதர் திரைப்படத்துக்காக மார்லன் பிராண்டோவுக்கு விருது வழங்கப்படுவ தாக ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர், நடிகை லிவ் உல்மன் ஆகியோர் அறிவித் தனர். விருதை எடுத்து அதை வழங்குவ தற்காக மேடையில் காத்திருந்தனர். மேடைக்கு வந்த லிட்டில்பெதர் விருதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டு உரையைத் தொடங்கினார். தன்னை யார் என்று அறி முகப்படுத்திக் கொண்ட அவர், மார்லன் பிராண்டோ கேட்டுக் கொண்டதன்படி அவருக்குப் பதிலாக வந்திருப்பதாகவும் விருதை நிராகரிக்குமாறு அவர் கூறிய தாகவும் தெரிவித்தார். உண்மையில் மார் லன் பிராண்டோ சற்று நீளமான உரையைத் தயாரித்து வழங்கியிருந்தார். ஆனால் விருதை நிராகரிப்பது தொடர்பாக 60 நொடிகள் பேசினால் போதும் என்று ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறி யதைத் தொடர்ந்து எழுதி வைத்திருந்த நீண்ட உரையைத் தவிர்த்துவிட்டு சுருக்க மாகப் பேசினார் லிட்டில்ஃபெதர்.

"இந்த விருதை ஏற்றுக் கொள்ள முடி யாது என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன்" என்று அவர் கூறியபோது பார்வையா ளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விருதை மார்லன் பிராண்டோ ஏற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம், "பூர்வ குடி அமெரிக்கர்களை திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தவறாகச் சித்தரிக் கப்படுவதும் வெட்கித் தலைகுனியவைத்த சமீபத்திய நிகழ்வுகளும்தான்" என்று லிட் டில் பெதர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் பூர்வகுடி அமெரிக்கர்கள்  பாதுகாப்பு அதிகாரிகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் நிகழ்வை அவர்  நினைவுகூர்ந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பார்வை யாளர்களாக இருந்த திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கேலி செய்யும் விதமாக ஆர்ப்பரித்தனர். ஆயினும் சில நொடிகள் இடைவெளிவிட்டு தனது உரையைத் தொடர்ந்தார் லிட்டில்பெதர். உரை முடிந்த தும் இரண்டு காவலர்கள் தன்னை பாது காப்புடன் வெளியே கொண்டு வர வேண் டியிருந்தது என்று 2020-இல் நாளிதழ் ஒன் றுக்கு அளித்த பேட்டியில் லிட்டில்பெதர் குறிப்பிட்டிருந்தார்.

"அப்போது மேடையின் பின்புறம் இருந்த நடிகர் ஜான் வெய்ன் என் மீதும் மார்லன் பிராண்டோ மீதும் கடுங்கோபத் தில் இருந்தார்.அடிமைகள் உங்களுக்கு பேசுவதற்கு துணிவு எப்படி வந்தது என்று முணுமுணுத்துக்கொண்டு என்னை அவரே மேடையை விட்டு இழுத்திருப்பார். நல்லவேளையாக என்னை ஆறு பாது காவலர்கள் பாதுகாத்தார்கள்" என்று லிட் டில் பெதர் அந்தப் பேட்டியில் கூறியிருந் தார். மேடையில் இருந்து நடந்து செல்லும் போது அமெரிக்கப் பூர்வகுடிகளை இழிவு படுத்தும் வகையிலான 'சைகை'யைச் சிலர் செய்ததாகவும் லிட்டில்பெதர் நினைவு கூர்கிறார்.

மார்லன் பிராண்டோ சார்பில் லிட்டில் பெதர் மேடை ஏறியதையும் விருதை நிராகரித்ததையும், லிட்டில் பெதரை கூடியிருந்த திரை உலகினர் நிராகரித் ததையும் எட்டரை கோடி மக்கள் தொலைக் காட்சி மூலமாக நேரலையில் பார்த்தார்கள். லிட்டில்பெதருக்கு நடந்த அந்தக் கொடுமை ஆஸ்கர் மேடையுடன் முடிந்துவிட வில்லை. அந்த நிகழ்வு நடந்த பிறகும் அவர் பொது வெளியில் பல அவமதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆங்கிலேய கார்ப்ப ரேட் ஊடகங்கள் பூர்வகுடிப் பெண்ணான  லிட்டில்பெதர் உண்மையில் ஒரு பூர்வகுடி அமெரிக்கரே கிடையாது. சினிமாவில் தமக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ப தற்காக  வேடம் போட்டார். இதை அவரே  ஒப்புக் கொண்டார் என்றும் மார்லன் பிராண் டோவின் கள்ளக்காதலி என்றும் எழுதின.

ஆனால் அவை அனைத்தும் பொய் யானவை என்று லிட்டில்பெதர் தனது பேட்டியில் கூறினார்.

அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் வரலாறு 

அய்ரோப்பியர்களின் வருகைக்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இன்றும் அமெரிக்க கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். சமீ பத்திய கணக்குப்படி 500-க்கும் மேற்பட்ட பூர்வகுடி இனங்கள் அமெரிக்காவில் வசித்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. இவர்கள் சுமார் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே இப்போது அமெ ரிக்கா என்று அறியப்படும் பிரதேசத்தில் வசித்து வந்திருக்கிறார்கள். 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அய்ரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்த பிறகு பூர்வகுடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வன் முறைகள், தாக்குதல்கள், இடம்பெயர்வு ஆகியவற்றுடன் அடிமையாக்கப்படுவது போன்ற காரணங்களால் பூர்வகுடி இனங் கள் பாதிக்கப்பட்டன. 1920கள் வரைக்கும் பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு பெரும்பான் மையான அமெ ரிக்க மாநிலங்கள் வாக் குரிமை வழங்க வில்லை. அந்த பாரபட்சம் சில பத்தாண்டு களுக்கு முன்பு வரைகூட சில மாநிலங்களில் நீடித்து வந்தது. இதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

"50 ஆண்டுகள்தானே ஆகிறது"

ஆஸ்கர் அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் லிட்டில்பெதருக்கு மன்னிப் புக் கடிதம் எழுதியிருக்கிறார். அது அகா டமியின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. 45ஆவது அகாடமி விருதுகள் விழாவில் லிட்டில்பெதர் பேசியது: "மரியா தையின் அவசியத்தையும் மனித கண்ணி யத்தின் முக்கியத்துவத்தையும் நமக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது" என்று மன்னிப்புக் கடிதத்தில் ரூபின் குறிப் பிட்டிருக்கிறார்.

அகாடமி அருங்காட்சியகம் சார்பில் செப்டம்பரில் ஒரு நிகழ்வை நடத்த இருக்கிறது. அதில் லிட்டிலபெதர் பங் கேற்று, 1973-ஆம் ஆண்டில் தமக்கு நேர்ந்த அனுபவம் தொடர்பாகவும் திரை யில் பூர்வகுடிகளின் எதிர்காலம் பற்றியும் பேச இருக்கிறார். அகாடமி மன்னிப்பு கேட்டதற்கு பதிலளித்திருக்கும் அவர், "அமெரிக்கப் பூர்வகுடிகள் பொறுமையா னவர்கள். 50 ஆண்டுகள்தானே ஆகி யிருக்கிறது" என்று குறிப்பிட்டார். நகைச் சுவை உணர்வை வைத்திருப்பது "நாங்கள் உயிர் வாழும் முறை" என்றும் லிட்டில்பெதர் கூறினார்.

No comments:

Post a Comment