தமிழ்நாட்டில் புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 485 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை,செப்.2- தமிழ்நாட்டில் நேற்று (1.9.2022) ஆண்கள் 291, பெண்கள் 194 என மொத்தம் 485 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 72 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 69,142 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 26,014 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 519 பேர் குணமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 5,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பில்லை. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 491 ஆகவும், சென்னையில் 76 ஆகவும் இருந்தது.


No comments:

Post a Comment