பாட்னா, செப்.12 பீகாரில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி மொழி பற்றி பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதலமைச்சர் தேஜஸ்வி கூறியுள்ளார்.
பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட் டணியை முறித்து கொண்டு, காங் கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக கடந்த மாதம் நிதிஷ் குமார் பொறுப் பேற்று கொண்டார். பீகாரில் எட் டாவது முறையாக அவர் முதல மைச்சராக பதவியேற்றுள்ளார்
துணை முதலமைச்சராக ராஷ் டீரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்று கொண்டார். வருகிற பொது தேர்தலில் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க .வுக்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டில்லி சென்றார். டில்லியில் முகாமிட்ட அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், மேனாள் முதலமைச்சர்களையும் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில், பீகாரின் பாட்னா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் உறுதிமொழி பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்தபோது, இதனை நம்ப மறுப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் அது நடக்கும். யாரோ ஒரு சிலர் ஏதோ கூறியதற்கு நான் பதிலளிக்க முடியாது. நாங்கள் அரசில் இருக் கிறோம். இது எங்களுடைய உறுதி மொழி. நிச்சயம் இது நடக்கும் என கூறினார். சுதந்திர தின உரையின் போது, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இறுதியாக பேசும்போது, பீகாரில் 20 லட்சம் வேலை வாய்ப் புகள் அரசிலும் மற்றும் அரசுக்கு வெளியேயும் ஏற்படுத்தப்படும் என உறுதிமொழி கூறினார். எனினும், இதனை எப்படி செயல்படுத்த போகி றார் என்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment