விலைவாசி உயர்வைக் கண்டித்து டில்லியில் போராட்டம் கருப்புடையுடன் ராகுல், பிரியங்கா கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

விலைவாசி உயர்வைக் கண்டித்து டில்லியில் போராட்டம் கருப்புடையுடன் ராகுல், பிரியங்கா கைது

புதுடில்லி,ஆக.6- பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டில்லியில் நேற்று (5.8.2022) மிகப்பெரிய அளவில் கருஞ்சட்டைப் பேரணி நடை பெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ சுட்டுரையில் பக்கத்தில் ஒரு சுட்டுரை வெளியிட் டுள்ளது. அதில் மனீஷ் திவாரி எம்.பி., "குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றோம். அப்போது விஜய் சவுக் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டோம். கிங்க்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். எங்கள் போராட் டம் தொடரும்" என்று எழுதியிருக்கிறார்.

கருப்புச் சட்டையில் பேரணி

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று கருப்பு நிற ஆடை அணிந்து போராட்டத்தில் பங்கேற் றனர். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியனவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காங்கிரஸார் இரு குழுக்களாகப் பிரிந்து பங்கேற்க முடிவு செய்திருந்தனர்..

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப் பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், குடி யரசுத்  தலைவர் மாளிகை நோக்கிய பேரணியையும் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டிருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, காங்கிரஸார் போராட் டத்தினை ஊகித்து டில்லி நிர்வாகம் நகரில் பெருந்திரளாக மக்கள் கூட தடைவிதித்தது. காங்கிரஸ் போராட் டம் நடத்தவும் அனுமதி மறுத்தது. இதனை சுட்டிக்காட்டியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. முன்னதாக, நேற்று (5.8.2022) காலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை நடுரோட்டில் வைத்து கைது செய்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஏதோ 4, 5 பேரின் நலனைக் காப்பதில் மட்டுமே அக்கறையுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு செங்கல்லாக நாங்கள் உருவாக்கி கட்டமைத்துள்ளோம். ஆனால், அய்ந்தே  ஆண்டுகளில் அத்தனையையும் சிதைத்துவிட்டார்கள். இந்த அரசாங் கத்தின் ஒரே கொள்கை மக்கள் பிரச் சினைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகம் மர ணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக் கிறது. அரசுக்கு எதிராக யாராவது குரல் உயர்த்தினால் அவர்கள் மீது அப் பட்டமாகவே தாக்குதல் நடத்தப்படு கிறது. அவர்கள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப் பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் என் பதே இல்லை. இங்கே 4 பேர் இருந்து கொண்டு சர்வாதிகாரம் செய்கின்றனர்" என்று காட்டமாகக் கூறியிருந்தார்.


No comments:

Post a Comment