சூத்திரர்கள் படித்ததால் தான் அமெரிக்கா சென்று தேசத்துரோகிகளாக மாறிவிட்டார்களாம்: சொல்வது அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

சூத்திரர்கள் படித்ததால் தான் அமெரிக்கா சென்று தேசத்துரோகிகளாக மாறிவிட்டார்களாம்: சொல்வது அமெரிக்கவாழ் பார்ப்பனர்கள்

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள ஆரஞ்ச் என்ற நகரில் ஆர்.எஸ்.எஸ். அயல்நாட்டுப் பிரிவு, இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்கவாழ் ஹிந்து அமைப்பினர் இணைந்து ' இந்திய விடுதலை நாள் 75' என்ற தலைப்பில் கொண்டாட்டங்களை நடத்தினர்

அப்போது இந்தியாவில் நடைபெறும் ஜாதிய ஒடுக்கு முறை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், குறித்த பதாகைகளை ஏந்தி பார்ப்பனர் அல்லாத இந்தியர்கள் ஒன்று சேர்ந்து அமைதிப்பேரணி சென்றனர். இதனைப் பார்த்த விடுதலை நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் பேரணி சென்றவர்களை தாக்கி யும் அடித்தும் விரட்டி உள்ளனர்.

மேலும் அவர்களை தேசத்துரோகிகள் என்றும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் கூட்டம் என்றும் வசைபாடினர், 

அப்போது கூட்டத்தில் உள்ள ஒருவர் (அசூத்) சூத்திரர்கள் உங்களுக்கு எல்லாம் கல்வி கொடுத்ததால் நாட்டையே காட்டிக்கொடுக்கத்துணிந்துவிட்டீர்கள். உங்களை எல்லாம் உங்கள் முன்னோர்களைப் போல் நடத்தி இருக்கவேண்டும், ஆனால் மோடி உங்களுக்கு கல்வியைக் கொடுத்து வசதிகளைச் செய்துகொடுத்தார், அதனால் நீங்கள் இங்கு வந்தீர்கள். இங்கு வந்து இப்படி செய்கிறீர்கள் என்றார். 

மேலும் ஒரு முதியவர் போராட்டக்காரர்களை நோக்கி  ”இஸ்லாமியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். அங்கு தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்றால் அவர்களுக்காக இங்கே வந்து ஏன் அழுகிறீர்கள், முஸ்லீம் நாடுகள் நிறைய உள்ளன. அங்கே சென்றுவிடவேண்டியதுதானே" என்று கூறினார். 

 அப்போது காவலர்கள் நீங்கள் சீனியர் சிட்டிசன் - உங்கள் இடத்திற்குச் செல்லுங்கள்,  அவர்கள் அமைதிப் பேரணிதானே நடத்துகிறார்கள் என்று கூறி அவரை அப்புறப்படுத்தி பேரணி தொடர பாதுகாப்பு கொடுத் தனர். இருப்பினும் பேரணி போகும் பாதையில் தேசத் துரோகிகள் ஒழிந்து போங்கள் வந்தே மாதரம், பாரத்மாதா கி ஜே என்று காட்டுக்கூச்சல் போட்டு பார்ப்பனர்கள் - கத்திக்கொண்டே சென்றனர்.


No comments:

Post a Comment