Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
August 15, 2022 • Viduthalai

2022-2023 கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த கல்விப்பிரிவுகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்  கடைசி தேதியை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துளளது.

மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் பட்டப்படிப்பு களில், பி.பார்ம் (லேட்டரல் என்ட்ரி), பி.எஸ்.சி செவிலியர் (போஸ்ட் பேசிக்), மனநல மருத்துவம் பட்ட யபடிப்பு (போஸ்ட் பேசிக்), செவிலியர் பட்டயப்படிப்பு (பெண்களுக்கு), மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் பட்டயபடிப்புகளில் சேர கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத் துவக் கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்துள்ளது . இந்த படிப்புகளில் 2536 இடங்கள் உள்ளன.

2022-2023 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை படிவங்கள்  tnmedicalselection.org  மற்றும்.tnhealth.tn.gov. in  என்ற இணையதளங்களில் பெறலாம்.  இந்த விண்ணப்பங்கள் 12ஆம் தேதி வரை மட்டுமே ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,

தற்போது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree courses) B.PHARM, B.P.T., B.ASLP, B.Sc. (NURSING), B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY   உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண் ணப்பித்தார்கள், இந்திய குடிமகனாகவும், தமிழ்நாட் டைப் பிறப்பிடமாக கொண்டவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் (PARA MEDICAL CERTIFICATE DIPLOMA COURSES) DIPLOMA IN PHARMACY, DIPLOMA IN OPTOMETRY  உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

அதேபோன்று, தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டயப் படிப்பில் 2060 இடங்கள் உள்ளன. இந்திய குடி மகனாகவும், தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண் விண்ணப்பபதாரர்கள் இந்த பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn