எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் இடைத் தேர்தலில் (திண்டுக்கல் தொகுதி) நின்று வெற்றி பெற்று அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான மாயத்தேவர் அவர்கள் நம்முடன் சட்டக் கல்லூரியில் படித்த நண்பர். ஒரே விடுதியிலும் தங்கியிருந்தோம். அவரும், அவரது சகோதரர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி அவர்களும்கூட ஒன்றாகப் படித்தவர்கள்.
அரசியல் வேறுபாடு இன்றி, பண்புடன் பழகிய நண்பர்கள் நாங்கள். அவர், 88 ஆம் வயதில் மறை வுற்றார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும், உறவினருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2022
No comments:
Post a Comment