ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை மதுரையில் நடந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை மதுரையில் நடந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம்

மதுரை, ஆக. 9- ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப் படையில் இடஒதுக்கீடு வழங்க வேண் டும் என்று மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத் தப்பட்ட, சீர்மரபினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்பு வாரியாக இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாநில அளவிலான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாநாடு மதுரை விமானநிலையம் அருகே 7.8.2022 அன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிற்படுத்தப்பட் டோர் அமைப்பினர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் அமைப்பினர், சீர்மரபு அமைப்பினர் என மொத்தம் 261 சமூ கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டனர்.

கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டுக்கு வீரசைவப் பேர வைத் தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ரஜினி வர வேற்றார். சீர்மரபினர் நலச்சங்கத் தலை வர் ஜெபமணி, பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்பின் தலைவரும் ஒருங்கிணைப் பாளருமான எஸ்.பி. ரத்தினசபாபதி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் வீரமங்கை மாயக்காள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சமுதாயத் தலை வர்கள் பங்கேற்றனர்.

பிற்பட்டோர் நல சமூக அமைப்பின் தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ரத்தினசபாபதி பேசியதாவது: எதிர் காலத்தில் நாம் எந்த வேலை வாய்ப்பு களையும் பெற முடியாத சூழல் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கமிஷன்கள் வழங்கும் புள்ளி விவரங்கள் தவறாக உள்ளன என்றார்.

பிற்பட்டோர் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பேசும் போது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியம் என நீதிமன்றம் கூறியதால் நாம் தற்போது இந்த மாநாட்டை நடத்த வேண்டிய நிலை. 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதை நீக்கி மக்கள்தொகை ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் ஓபிசி மக்களுக்குரிய கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை. 2021இல் நடத்த வேண்டிய காகிதமில்லா கணக்கெடுப் பில் ஓபிசி ஜாதிவாரி புள்ளிவிவரங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு புள்ளிவிவர சேக ரிப்புச் சட்டம் 2008இன் படி ஜாதிவாரி, சமூக, கல்வி, பொருளாதாரக் கணக்கெ டுப்பு நடத்தி தமிழகத்தில் பிசி, எம்பிசி, டிஎன்டி, எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு வழங்கப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக் கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.

ஒன்றிய அரசு 2011இல் நடத்திய ஜாதிவாரி சமூகப் பொருளாதார கணக் கெடுப்பு புள்ளிவிவரங்களை உடனே வெளியிட வேண்டும்.

50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வகுப்புவாரி இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சட்டவிரோதமாக முன்னேறிய வகுப்புக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பன உள்ளிட்ட 100 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment