இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தமிழ் மாநில செயலாளராக மூன்றாம் முறையாக தோழர் இரா.முத்தரசன் திருப்பூரில் நடைபெற்ற அவர்களது கட்சியின் பொதுக்குழு - மாநாட்டில் நேற்று (9.8.2022) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற இனிப்பான செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
கிராமிய சூழ்நிலையில் வளர்ந்து, மார்க்சியம், பெரியாரியம் போன்ற தத்துவங்களை நன்கு கற்று, வெறும் தொண்டின்மூலம் பொதுவாழ்வில் தொடர்ந்து பல்லாண்டுகளாக உழைத்துவரும் தோழர் முத்தரசன் காட்சிக்கெளியவர்; கடுஞ்சொல்லர் அல்ல; கொள்கைகளில் உறுதி மிக்கவர்; சிறந்த பண்பாளர்.
அவரது தொண்டுக்கு மூன்றாவது முறை - செய லாளராக தேர்வு என்பதே போதிய சான்றிதழாகும்!
நல்ல உடல்நலத்துடன், மிகவும் முக்கியமான அரசியல் காலகட்டமான இந்தக் காலத்தில் அவர் தலைமையில் அக்கட்சி செயலாற்றி, கேள்விக்குறி யாகும் ஜனநாயகம், அரசமைப்புச் சட்ட நெறிகளைக் காப்பாற்ற, அவரது கட்சியாகிய சி.பி.அய். மட்டு மல்லாது, மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஓரணியில் திரண்டு, பொது நோக் குடன் வெல்லுவதற்கு இது ஒரு நல்ல ஊக்கமும் ஆகும்!
திராவிடர் கழகம் என்றும் துணை நிற்பதோடு, சக போராளியாக களமாடவும் ஆயத்தமாக இருப் போம் என்று கூறி, நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்து களைத் தோழர் முத்தரசன் அவர்களுக்குத் தெரி விக்கிறோம். அவரைத் தேர்வு செய்த அக்கட்சியின ருக்கும் நமது வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2022
No comments:
Post a Comment