சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவிற்குப் பின், தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடி வடைந்து இன்று (28.8.2022) 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்!
அவருக்குத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
1967 இல் அறிஞர் அண்ணா முதலமைச்சர் பொறுப்பு ஏற்று, முத்திரை பதித்த முப்பெரும் சாதனைகளை ஒரே ஆண்டில் சாதித்து சரித்திரம் படைத்ததற்குப் பிறகு, தி.மு.க.வினைக் கட்டுக்கோப்பு குலையாமல் வழிநடத்திட தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்முதல் தொண்டர்கள்வரை விழைந்தபடி கலைஞர் முதலமைச்சர் பொறுப்பேற்று சிறந்த வரலாறு படைத்தார்.
கலைஞர் அவர்கள் மறைந்த நிலையில், நம் இன எதிரிகள் இது வெற்றிடம் என்று கூறி, ஆட்சியைப் பிடிக்க வகுத்த வியூகங்களை மூன்று தேர்தல்களில் தோற்கடித்து, அடக்கம் - அரவணைப்பு - அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டும் அரசியல் கட்சியாக தி.மு.க.வை வழிநடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாகை சூடி வருகிறார்.
நாளும் புதுப்புது சாதனைப் பொன்னேட்டை இணைத்து வருகிறார் தி.மு.க.வின் செயல்மிகு தலைவர்.
அவர் தலைமையில் தி.மு.க. பீடுநடை போடுகிறது. 'திராவிட மாடல்' ஆட்சியையும், கட்சியையும் பொலி வுடன் நடத்திடுகிறார்.
அவருக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
No comments:
Post a Comment