அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி: வழிகாட்டுதல்கள் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி: வழிகாட்டுதல்கள் அறிக்கை

சென்னை, ஆக. 9- உயர்கல்வி பயி லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர் கல்வி உறுதி திட்டத்தை செயல் படுத்துவதற்கான வழிகாட்டு தல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக நலத் துறை செயலர் ஷம்பு கல்லோ லிகர் வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது.

உயர்கல்வி உறுதித் திட் டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளி களின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற் றைச் சாளர சேவை உள்ளிட் டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத் துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, இயக் குநரின் கருத்துரு தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத் தின் மூலம், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி களில் படித்து உயர்கல்வி படிக் கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட் டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். இத்திட்டம் முழுமையாக இணைய வழியாக செயல்படுத் தப்படுகிறது. இணைய உள் ளிட்ட வசதிகளை மின்னா ளுமை நிறுவனம் பராமரிக்கும். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித் துறை, விண்ணப்பங்களை பெற்று வழங்கும். அத்துடன், மாணவி களுக்கு வைப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதை யும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7ஆம் தேதி பய னாளியின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 அனுப்புவதற்கான உத் தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.

இத்திட்டத்தை கண்கா ணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவி லான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலை மையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு திட்டம் கண்காணிக் கப்படுகிறது.

வழிகாட்டுதல்கள்

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக் கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும். மேலும், அரசுப் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை முடித்து டிப் ளமோ, அய்டிஅய் படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட் டம் பொருந்தும்.

வேறு மாநிலத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து படிக் கும் மாணவிகளுக்கு இத்திட் டம் பொருந்தாது.

உயர்கல்வி என்றால் கலை மற்றும் அறிவியல், தொழிற் கல்வி படிப்புகள், பாராமெடிக் கல், பட்டயம், அய்டிஅய், ஒருங் கிணைந்த முதுநிலைக் கல்வி என அனைத்துக்கும் பொருந்தும்.

முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ஒருங்கிணைந்த முது நிலைக் கல்வி படிக்கும் மாண விகளுக்கு முதல் 3 ஆண்டு களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். தொலைநிலைக் கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

பாலிடெக்னிக் படிப்பவர் களுக்கு 3 ஆண்டுகள், அய்டி அய் சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 3 ஆண்டுகள், பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்பு களுக்கு 4 ஆண்டுகள், மருத்து வப் படிப்புக்கு 5 ஆண்டுகள், சட்டம் மற்றும் பாரா மெடிக் கல் படிப்புகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெறமுடியும்.

அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவி களில் யார் உயர்கல்வி பயில் கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

ஆதார் எண் கட்டாயம்.

பயன்பெற விரும்பும் தகுதி யான மாணவிகள், தாங்களா கவே இணையத்தில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரி வாயிலாக பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பான தக வல்கள் மற்றும் கோரிக்கைக ளுக்கு இணையம் மூலம் தக வல்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. உயர்கல்வி உறுதித் திட்டத்தை இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக் கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப் பார் என சமூகநலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


No comments:

Post a Comment