Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
July 21, 2022 • Viduthalai

 பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (2)

வாழ்க்கைக்கான பொருளை தக்க வழியில் உரிய முறையில் சேர்ப்பது முக்கியம் என்பதற்கு அடுத்தபடியாக, சேர்த்த செல்வத்தை - பொருளை - சரியாகப் பாதுகாக்கவும் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

தக்க பொருளை சம்பாதிப்பதை விட முக்கியம் அதனைக் காக்கத் தெரிய வேண்டும்.

இன்று ஊடகங்களில், தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளில் இடையறாது வரும் செய்தி, 'அதிக வட்டி தருகிறோம்' என்று போலி நிதிக்கம்பெனிகள்  பேரால் ஏராளமான கவர்ச்சிக்கர விளம்பரங் களைச் செய்து, மக்களின், வீட்டு இல்லத்தரசிகளது 'சிறுவாட்டு காசு' சேமிப்பு உள்பட பலவற்றையும் கொள்ளை யடித்துக் கொண்டு போகும் குறுக்கு வழி குபேரர்கள் (பிறகு சிறைக் கம்பி எண்ணுப வர்களாக இருந்தாலும்) ஏமாற்றி, நடுத்தர குடும் பங்களைக்கூட ஒரே நாளில் 'வறியர்களாக்கி'டும் புயலை உருவாக்கி அவர்கள் நடுத் தெருவில் நின்று புலம்பும் பரிதாபக் காட்சியை ஏற்படுத் துகின்ற கொடுமையை என் சொல்வது?

இப்படி ஏமாறுபவர்களில் பாமரர்கள் ஒரு மடங்கு என்றால், படித்தவர்களே அதிகம் உள்ளது, அவர்கள் தங்களின் மேலான பகுத் தறிவை இழந்து படித்தவர்களாக மட்டுமே இருக்கிறார்களே என்ற வேதனையைத்தான் நமக்கு ஏற்படுத்துகிறது!

வள்ளுவர் தமது திருக்குறளில் ஒரு அரிய கருத்தைக் கூறுகிறார்!

வருவாயைப் பெருக்குவது எப்படி? என்ற கேள்விக்கு செலவைச் சுருக்கினாலே அது வரவை, வருவாயைப் பெருக்கியது ஆகும் என்கிறார்!

எனவே தேவையற்ற - செலவுகளை நாம் செய்யாது- தீய பழக்க வழக்கங்களிற்கு அடிமைகளாக நாம் ஆளாகாமல் 'தற்காத்து தன்னைப் பேணிக் கொண்டால்' எவ்வளவு சேமிப்பு என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

"எனக்கு பீடி, சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கம் இல்லை என்பதால் எனது உடல் நலம் கெடவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட முக்கியம் எனது வாழ்வில் பொருள் சேமிப்பையும் ஒரு பெருமளவுக்கு அப்பழக்கம் என்னை அறியாமலேயே எனக்குத் தருகிறது என்பதை எண்ணி பெருமிதப்பட வேண்டும் நான்!"

"எனக்கு, போதை- குடிப் பழக்கம் இல்லை மற்ற சூதாட்டப் பழக்கமில்லை- ஒழுக்கக்கேடு பழக்கங்களை நாடிச் செல்லவில்லை - அதனால் பொருள் கண்ணோட்டத்தில் எவ்வளவு பலன்! நம் வாழ்நாள் நாட்களில் அப்படி ஈடுபட்டு இருந்தால் அதற்குச் செலவழித்தே 'பிச்சைக் காரனாக்கப்பட்டிருப்பேன்'" என்று ஒரு கணம் ஒவ்வொருவரும் யோசித்தால், நல்லொழுக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாழ் வாதார பொருளாதாரத்திற்கும், கடன் வாங்கிச் சீரழியும் சிறுமைக்கும் இடந்தராத பெருமை அல்லவா?

என் நண்பர் ஒருவர் பொடி போடும் பழக்க முடையவர். அவர் சிரித்துக் கொண்டே சொல்வார்.

"சார், என் மூக்குக்குள் எத்தனை ஆயிரம் ரூபாய்களை நான் உள்ளே போட்டு உறிஞ்சி இருக்கேன் தெரியுமா?" என்பார்.

பழைய நண்பர்கள் மூன்று சொல்வார்கள்-  உண்ணல்  - ஊதல் - உறிஞ்சல் என்று.

1.  உண்ணல்  - வெற்றிலை பாக்கு, புகையிலை போடுதல்!

2. ஊதல் - பீடி, சிகரெட், சுருட்டு புகைப் பிடித்தல் அல்ல - புகை குடித்தல், உள்ளே விழுங்கித் தொலைக்கிறார்களே!

3. உறிஞ்சல் - பொடி உறிஞ்சல் (அது இறுதியில் உயிரையே உறிஞ்சி விடுகிறது.

இவை இருந்தால் வாழ்வில் வரும் ஒவ்வொரு நாள் செலவையும், கூட்டிப் பெருக்கிப் பார்த்தால் எத்தனை ஆயிரம் ரூபாய் வீண் செலவில் 'பொருள் விரயம்' என்று ஆகியிருக்கும் என்ப தையும் எண்ணினால், நல்லவர்கள் அவர்கள் முதுகை அவர்களே தட்டி மகிழ்ந்து கொள்ளலாம் அல்லவா?

(மேலும் சிந்திப்போம்)


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn