தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.இராசா எம்.பி., என்ன சொல்லி விட்டார் அப்படி? ''மாநிலத் தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி!'' என்றுதானே கூறியிருக்கிறார். இந் தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்தானே - அரசமைப்புச் சட்டம் அதைத்தானே கூறுகிறது! இதில் என்ன குற்றம் கண்டது 'தினமலர்' கும்பல் - வெங்காயம்!
மாநிலத்தின் உரிமைகளை ஒவ் வொன்றாகக் கபளீகரம் செய்தால் - அது எங்கே கொண்டு போய்விடும் என்பதுதான் முக்கிய கேள்வி.
அதனைப் புரிந்துகொள்ளாமலா பூணூல் ஏடு இடக்கு முடக்காக எழுது கிறது?
திராவிட நாட்டைக் கைவிட்ட அண்ணாகூட ''நாட்டுப் பிரிவினை யைக் கைவிட்டோம்! ஆனால், அதற் கான காரணங்கள் அப்படியே இருக் கின்றன!'' என்று சொல்லவில்லையா!
ஒன்றாக இருந்த சோவியத் யூனி யன் பிளவுபட்டதற்குக் காரணம் என்ன?
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று பேசும் கூட்ட மல்லவா - 'தினமலர்'கள் இப்படித்தான் பூணூலை முடுக்கிவிட்டு சிண்டு முடி யும் வேலையை 'அழகாகவே' செய் யும்!
ஈ.வெ.ரா. வழி என்பது என்ன கெட்ட வழியா?
அந்த வழியில் ஆ.இராசா செல்ல வழியனுப்பத் தயாராக இருக்காங் களாம்.
'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதானே அந்த வழி!
பெரியார் பிறந்த நாளை அரசு சார்பில் ''சமூகநீதி நாளாக'' அறிவித்து விட்ட பிறகு - புதிதாக ஈ.வெ.ரா. வழிக்குச் செல்லுவது என்ற பேச்சு எங்கே இருந்து குதித்தது?
குடுமிகளே, குதியுங்கள்! குதியுங் கள்!! மீதி மிச்சம் இருக்கும் இளை ஞர்களும் இனவுணர்வு செந்தீயில் புடம்போட்டு எடுக்க அது மிகவும் பயன்படும்!
No comments:
Post a Comment