காந்தி, படேல் பிறந்த மண்ணில் போதை வியாபாரமா? ராகுல் காந்தி சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

காந்தி, படேல் பிறந்த மண்ணில் போதை வியாபாரமா? ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி, ஜூலை 31 குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராய சாவு குறித்து பாஜகவைக் காங்கிரஸ்  மேனாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மங்களை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். பாவ்நகர், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங் களில் உள்ள வெவ்வேறு மருத்துவ மனைகளில் மேலும் 97 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, பர்வாலா காவல் நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

வழக்கு விசாரணையைக் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து தொடங்கியுள்ளன. இங்கு உயிரிழந்தவர்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோத னையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதுவரை கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். குஜராத் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் காங் கிரஸ் மேனாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  ராகுல் காந்தி சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.  அந்த பதிவில்,”இந்தியாவில் வறண்ட மாநிலமான குஜராத்தில், கள்ளச்சாரா யம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டன, அம்மாநிலத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள்கள் தொடர்ந்து கைப்பற்றப்படுகின்றன.

காந்தியார் மற்றும் சர்தார் வல்ல பாய் பட்டேல் ஆகியோர் பிறந்த மண் ணில், கண்மூடித்தனமாகப் போதை வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? என்பது மிகவும் கவலைக்குரிய விடய மாக உள்ளது, இத்தகைய மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?” என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment