சென்னை, ஜூலை 23 ‘நீட்' தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு கேட்டுள்ள 6 கேள்விகளுக்கு, தமிழ்நாடு அரசின் பதில் தயாராக உள்ளதாகவும், அது ஓரிரு நாள்களில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அமைச்ச கங்கள் கேட்ட கேள்விகள், அதற்கு அளித்துள்ள பதில்களை விரிவாக எடுத்துக் கூறினார்.
கேள்வி:- மசோதாவை நிறைவேற்றுவ தற்கு மாநில சட்டமன்றத்துக்கு அதி காரம் உள்ளதா? தேசிய மருத்துவ ஆணையச்சட்டம், இந்திய மருத்துவ முறை தேசிய ஆணையச்சட்டம் மற்றும் ஓமியோபதி தேசிய ஆணையச்சட்டம் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப் புகள் குறித்த ஷரத்துகள் ஏற்கெனவே உள்ளன. எனவே மசோதா மாநில சட்டமன்ற அதிகார வரம்புக்கு மீறியதாக உள்ளதா?
பதில்: - மருத்துவ கல்வியை உள்ள டக்கிய 7-ஆவது அட்டவணையின் பட்டியல் 3-இல் பதிவு 25-இன்படி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடர்பான சட்டங்களை உருவாக்கும், சட்டம் இயற்றும் தகுதி மாநில சட்டமன்றத்துக்கு உள்ளதென்பதால், மேற்கூறிய ஆட்சே பணை அடிப்படையற்றது. மாநில சட்ட மன்றத்துக்கு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்த சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது.
இதனை உச்சநீதிமன்றம் 'தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைப்பு அதர்ஸ்-2021' என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.
கல்வியின் தரம், ஒருங்கிணைப்பு ஆகியவை மாநிலத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியுள்ளது. 'பிரீத்தி சிறீவத்சவா அன்ட் அதர்ஸ், ஸ்டேட் ஆப் மத்திய பிரதேசம் அதர்ஸ்- 1999-ஆம் ஆண்டு' வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை யில் மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.
கேள்வி:- மசோதா மாநில சட்ட மன்றத்தின் தகுதிக்கு அப்பாற்பட்டது.
பதில்:- உச்சநீதிமன்றம், 'தமிழ்நாடு மெடிக்கல் ஆபிசர் அசோசியேஷன்ஸ், -_ யூனியன் ஆப் இந்தியா அதர்ஸ்-2021' ஆணையின்படி பட்டியல்-3, பதிவு 25-இன்கீழ் ஒன்றிய அரசின் சட்டங்கள் மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங் களின் சேர்க்கை முறையை கட்டுப்படுத்த முடியாது என்பதும், இந்த இனங்களில் மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரமுள்ளது என்பதும் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 'ஹிஸ்ட் பார்மட்டிகல் லிமிடெட், ஸ்டேட் ஆப் பீகார்-1983-ம் ஆண்டு' ஆணையில் ஒரு சட்டம் மாநில மற்றும் ஒன்றிய சட்டங்களுக்கு இடையே முரண்பாடு இருக்கும் பட்சத்தில் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல்பெறும் பட்சத்தில் இந்த முரண்பாடு களையப் படும் என்று தெளிவாக கூறியுள்ளது.
எனவே மாநிலங்களின் சட்டமன்றத் துக்கு இந்த மசோதாவை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பது முற்றிலும் தவறான வாதமாகும்.
கேள்வி:- 'நீட்' தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு என்றும், வரலாற்று சீர்திருத்தங்களை உள்ளடக்கியது என் றும், தரமான கல்வி, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றால் மாணவர் சேர்க் கையை உறுதிப்படுத்துகிறது என்றும், மாணவர்களுக்கு ஒரே தேர்வு எழுது வதன் மூலம் பல்வேறு தேர்வுகளில் இருந்து மாணவர்களின் சுமை குறைக்கப் பட்டுள்ளது என்றும் கூறப்படுவது பற்றி....?
பதில்:- இது முற்றிலும் ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, 'நீட்' தேர்வு முறையே இல்லாமல், மாணவர் களின் 12-ஆம் வகுப்பு தேர்வினை அடிப் படையாகக்கொண்டு இளநிலை மருத்து வப்படிப்பு சேர்க்கையை தகுதித்தேர்வு, அதாவது தமிழ்நாடு மேல்நிலை தேர்வு குழுமத்தினால் மேல்நிலை அளவில், சி.பி.எஸ்.இ. அல்லது பிற மாநிலத்தின் குழுமம் அல்லது பிற அதிகார அமைப்பினாலும் நடத்தப்படும் இணையான தேர்வு அடிப்படையில், இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க் கையை உறுதிப்படுத்துகிறது. மேலும் நெறிப்படுத்துதல் முறையை மேற் கொண்டு, சமநிலைப்படுத்த உரிய வழி முறைகளையும் தெளிவாக விளக்குகிறது. இந்த மசோதா இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் சேர்க் கையை முன்வைத்துள்ளது. இது மாண வர்கள் பல்வேறு தேர்வுகள் எழுதுவதை முற்றிலும் குறைத்து, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, மனஅழுத்தத்திலிருந்து விடுபட ஏதுவாக அமைகிறது. எனவே 'நீட்' தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது.
கேள்வி:-இந்த 'நீட்' மசோதா தேசத் தின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப் பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்துமா?
பதில்:- 'நீட்' மசோதா நாட்டின் இறை யாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத வாதமாகும். இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைமுறை நாட்டின் இறையாண் மைக்கோ, ஒற்றுமைக்கோ, ஒருமைப்பாட் டுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற் படுத்தாது.
கேள்வி:- இந்த மசோதா வேறொரு மாணவர் சேர்க்கை முறையை பின்பற்று வதால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 14-அய் மீறுவது ஆகாதா?
பதில்:- இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் பிரிவு 14-அய் மீறுவது என்ற ஆட் சேபணையை ஏற்கமுடியாது. மசோதா வில் பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண் களின் அடிப்படையிலான சேர்க்கை முறை வேறு எந்த சேர்க்கைமுறையை விடவும் நியாயமானது சமத்துவத்தை ஏற்படுத்துகிறது. எனவே அரசமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது.
கேள்வி:- இந்த மசோதா தேசியக் கல்விக் கொள்கைக்கு முரணானதாக அமைந்துள்ளதா?
பதில்:- இந்த மசோதா தேசிய கல்விக் கொள்கை 2020-அய் மீறியுள்ளது என்று ஒன்றிய அமைச்சகங்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ள வாதம் முற்றிலும் ஏற்க முடியாது. தேசிய கல்விக் கொள்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான தாக உள்ளது. "கூட்டாட்சி தத்துவம் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப் பின் ஒரு பகுதி என நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 'எஸ்.ஆர்.பொம்மை, யூனியன் ஆப் இந்தியா 1994' வழக்கின் தீர்ப்பின்படி, கூட்டாட்சி தத்துவம், நாட்டின் பன்முகத் தன்மை, ஜனநாயகம் ஆகியன அரசமைப்பின் அடிப்படை கூறுகளாக விளங்குகின்றன" என தெளிவுப்படுத்தப் பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மாநில சட்ட மன்றத்துக்கு வழிகாட்டும் காரணியாக இருக்கமுடியாது என்பதால், மாநில சட்டமன்றங்களுக்கு உயர்கல்வி குறித்து சட்டம் இயற்ற முழுஅதிகாரம் உள்ளது. மேலும் 'மாடர்ன் டெண்டல் காலேஜ் அன்ட் ரிசர்ச், ஸ்டேட் ஆப் மத்திய பிரதேசம் 2016-ஆம் ஆண்டு' வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு பத்தி 149-இல், இதுகுறித்து தெளிவான கருத்தை தெரிவித்துள்ளது. எனவே இந்த சட்ட மசோதா கிராமப்புற ஏழை- _ எளிய மாணவர்களுக்கு சமமான, நியாயமான வாய்ப்புகளை வழங்குகிறது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான அரசின் ஒதுக் கீட்டு இடங்களில் தரமான கல்வியையும், சமவாய்ப்பையும் வழங்கிட ஏதுவாக அமையும். எனவே ஒன்றிய அரசு இந்த மசோதாவை குடியரசுதலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த பதில்கள் ஓரிரு நாட்களில் ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகவிய லாளர்களிடம் கூறியதாவது:- ஒன்றிய அரசின் 6 வகையான கேள்விகளுக்கான பதில்களை தமிழ்நாடு அரசின் சட்டத் துறை மிகத் தெளிவான பல்வேறு விளக்கங்களுடன் கூடிய சட்டரீதியான பதில்களை தயாரித்துள்ளது. இது ஓரிரு நாள்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. அரசின் சார்பில் இதேபோல் ஆளுநர் மூலம் அனுப்பப்பட்டது.
உள்துறை அமைச்சகம் மாநில அர சுக்கு முடியாது என்று பதில் அனுப்பியது. ஆனால் இப்போது கருத்துகள், விளக் கங்களை கேட்டு இருக்கிறது. விளக் கங்கள் கேட்டு இருப்பது என்பதே ஒரு படி நாம் முன்னேறி இருக்கிறோம் என்று அர்த்தம். விளக்கங்களுக்கு சரி யான பதில் சொல்லப்பட்டுள்ளது. ஏற் புடைய பதிலாக இருக்கின்ற காரணத் தினால் ஏற்றுக்கொண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிப்பார்கள் என்று எதிர் பார்ப்போம். புதிய குடியரசுத்தலைவர் அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர். 'நீட்' தேர்வு விலக்கு கிடைக்கும் என்றே நாம் நம்புவோம். இந்த விஷயத்தில் வேகமான செயல் பாட்டை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஒவ்வொரு காயாக நகர்த்திக் கொண்டு இருக்கிறார். நிச்சயம் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க் கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment