கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை விதிகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை விதிகளை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 31 கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத் துவமனையில் செவிலியராக பணியாற் றிய தங்கலட்சுமி கரோனா சிகிச்சை பணியில் முன்கள பணியாளராக வேலை செய்தார். அப்போது அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  அவர் மரணம் அடைந்தார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணி யாளர்கள் தொற்று பாதித்து உயிரி ழந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அப்போது அறிவித்தார். 

விதிகள் இல்லை 

அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச் சலம் கொடுத்த மனுவை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை' என்று விளக்கம் அளித்தார். 

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:  கரோ னாவில் உயிரிழந்த முன்கள பணியாளர் களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண் டும். அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு கடந்த மே 11-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. 

அந்த உத்தரவின்படி அரசு எந்த விதிகளையும் இதுவரை வகுக்கவில்லை. எனவே, உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும். அதுதொடர்பான அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற ஆகஸ்டு 10-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment