Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தமிழ்நாடு கருவூலங்களில் கணக்கு அலுவலர் பணி டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
July 20, 2022 • Viduthalai

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

 தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இதற்காக, ஒவ்வொரு துறைகள் சார்பிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது, ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற பணிகளில் கண்காணிப்பாளர்கள் நிலையிலான அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள். 

தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகளுக்கு அதன் விவரங்களை அனுப்பி வைப்பார்கள். 

அதன்பிறகு, கருவூலத்துறை சார்பில் நிதி விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக கருவூலம், மற்றும் கணக்கு துறைகளில் காலி பணியிடங்களால் இப்பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அய்ந்து ஆண்டுகள் கண்காணிப்பாளர் பணி முடித்தவர்களை கணக்கு அலுவலராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

காலிப்பணியிடங்கள் : கணக்கு அலுவலர் பணிக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 23 (17 முன்கொணரப்பட்ட காலிப்பணியிடங்கள் உட்பட) 

ஊதிய விபரம் : பல்வேறு தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு பணியமர்த்தப்

படும் கணக்கு அலுவலர்களுக்கு அரசின் நிலை 23ன் படி 56,900 ரூபாய் முதல் 2,09,200 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்  விண்ணப்ப

தாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.inஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள் : 15.07.2022ஆம் தேதியன்று கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான 

அறிவிப்பாணை தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டது. 

13.08.2022 ஆம் தேதிக்குள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் 08.10.2022ஆம் தேதி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும் .

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டும். சிஏ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள்(சாட்டர்டு அக்கவுண்ட்) நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம். 

தேர்வுக்கான கட்டணம்: விண்ணப்பதார்கள் இந்த தேர்வுக்காக கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். 

நிரந்தர பதிவுக் கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

தேர்வு நடைமுறை : டிஎன்பிஎஸ்சி விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 810 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். 

வயது வரம்பு : 01.07.2022 விண்ணப்பதாரர் களுக்கு 32 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப் படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. 

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn