சென்னை, ஜூலை 16 தமிழ் நாட்டில் 18 வயது முதல் 59 வயது வரையுள் ளவர்களுக்கு பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மய்யங்களில் வழங்கும் நிகழ்ச்சியை எழும்பூரில் உள்ள அரசு குடும்ப நல பயிற்சி மய்யத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச் சர் அளித்த பேட்டியில், "தமிழ் நாட்டில் முகாம்கள் மூலம் மட்டும் 4 கோடியே 61 லட்சத்து 75,586 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேல் 95.27 சதவீதத்தினர் முதல் தவ ணை யும், 87.35 சதவீதத்தினர் இரண் டாவது தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மூலம் இதுவரை 11 கோடியே 63 லட்சத்து 18,727 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. ஒன்றிய அரசு 75-ஆவது ஆண்டு பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசியை ஜூலை 15-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு அரசு மையங்களில் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாவார்கள். ஆனால், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் 38 மாவட்டங் களிலுள்ள 2,590 அரசு கரோனா தடுப்பூசி மய்யங்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பெரிய அலுவலக வளாகங்கள் (அரசு,தனி யார்), தொழில் நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடை யேயான பேருந்து நிலை யங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத் தப்படும். சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் கோவின் (சிஷீகீமிழி) இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறப்பு தடுப்பூசி முகாம்கள், சுற்றுலா தலங்கள், மேளா மற்றும் சபைகள் உள்ள இடங்களில் நடத்தப்படும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் வாரந் தோறும் தடுப்பூசி சாதனைகள் ஆய்வு செய்யப்படும். பொது மக்கள் அனைவரும் அரசு இலவசமாக வழங்கும் வாய்ப்பினை பயன்படுத்தி 18-59 வயதுவுடை யவர்கள் பூஸ்டர் தவணை தடுப் பூசியை செலுத்திக் கொண்டு கரோனா என்ற பெருந்தொற்றி லிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment