1. பள்ளிக்கூடங்களும், காலேஜுகளும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திசாலை. லா காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்துக்கு உபயோகப்படக் கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்தி சாலை. மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக்கூடம் நாட்டு வைத்தியத்தைக் கொல்ல எமன்களையும், சீமை மருந்துகளை விற்கத் தரகர்களையும் உண்டாக்கும் உற்பத்திசாலை.
2. இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத் தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினா லோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம் அதிக சந்தேகந்தான்.
3. தமிழர்கள் தங்கள் அறியாத்தனத்தினால் வெள்ளைக்காரர்களைத் துரையென்றும், பிராமணர்களை சாமியென்றும் கூப்பிடுவதோடு இவர்களைக் கண்டால் தாமே முன் மரியாதை செய்ய வேண்டுமென்றும், அதிலும் பிராமணச் சிறுவனைக் கண்டாலும் கும்பிடவேண்டியது மத தர்மமென்றும் எண்ணுகிறார்கள்.
4. ஒரு வேலைக்காகப் போடப்பட்ட விண் ணப்பங்களில் ஆங்கிலத்தில் பெரிய பரீட்சை பாஸ் செய்தவனோ மற்றும் பல பாஸ் செய்தவனோ போட்ட விண்ணப்பத்தைத்தான் எஜமானனாயிருப்பவன் கவனிக்க வேண்டு மென்பதும், அவருக்குத்தான் வேலை கொடுக்க வேண்டுமென்பதும் பொறுப் பற்றதும் முட்டாள் தனமானதுமாகும். வேலைக்கு வேண்டிய யோக்கியதை இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதுதான் கிரமமானதாகும். கெட்டிக் காரரும், யோக்கியமானவர்களும் மெட்ரிகுலேசன் படித்தவர்களில் இருக்கிறார்கள். சோம்பேறியும், அயோக்கியர்களும் பி.ஏ., எம்.ஏ., படித்தவர்களில் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment