பிராயச்சித்தம் (பிராமணர்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

பிராயச்சித்தம் (பிராமணர்)

23.08.1925 - குடிஅரசிலிருந்து

ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரிகள் வந்தார்.

பெரியமனிதர் :- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்.

சாஸ்திரிகள் :- அப்படியா, என்ன விசேஷம்? 

பெரிய மனிதர் :- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிறுகட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான் இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?

சாஸ்திரிகள் :- ஆஹா உண்டு; அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டால் அந்தப்பாவம் தீர்ந்துபோகும். இல்லாவிட்டால் அந்தப்பையனைப் பார்க்கவே கூடாது.

பெரிய மனிதர் :- தத்துக்கிளியின் கழுத்தில் கயிறுகட்டி இறுக்கிக் கொன்றது. தங்களுடைய மகன் தான், அதற்கு வேண்டியதை சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.

சாஸ்திரிகள் :- ஓ! ஹோ! பிராம ணனா! அப்படியானால், இனிமேல் அப்படிச்செய்யாதே என்று சொல்லி விட்டால் போதும்.


No comments:

Post a Comment