கார்பன்டையாக்சைடு மாசை, துவங்கும் இடத்திலேயே தடுக்க ஒரு கண்டுபிடிப்பு வந்துள்ளது. புகை போக்கி குழாய்களின் வழியேதான், மாசு கலந்த புகையை வெளியேறுகின்றன.
இதை, ஒரு பருத்தித் துணியால் வடிகட்டிவிடலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.பருத்தித் துணியை, சிட்டோசான் மற்றும் கார்போனிக் அன்ஹைட்ரேஸ் ஆகிய வேதிப் பொருட்களில் தோய்த்தெடுத்தால், சிறப்பு வடிகட்டி தயார். இதன் வழியே கார்பன்டையாக்சைடு புகை செல்லும்போது, வேதி வினை ஏற்பட்டு, பைகார்பனேட் என்ற பொருளாக மாறி, வடிகட்டியில் தங்கிவிடுகிறது.
சமையல் சோடாவின் முக்கிய மூலப்பொருள் தான் இந்த பைகார்பனேட்.ஆய்வுகளில், ஒரே ஒரு துணி வடிகட்டியை வைத்து, 52 சதவீத கார்பன்டையாக்சைடையும், இரண்டு துணிகளை வைத்து, 81 சதவீத மாசையும் விஞ்ஞானிகள் வடிகட்டியுள்ளனர்.இந்த துணியை அய்ந்து முறை வரை மறுபயன் செய்யலாம்.
No comments:
Post a Comment