பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படத்தக்க அளவில் உள்ளது மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 16, 2022

பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படத்தக்க அளவில் உள்ளது மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடில்லி, மே 16 நாட்டின் பொருளா தாரம் கவலைப்படத்தக்க அளவில் இருப்பதால், பொருளா தார கொள்கைளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி கூறினார்.

பொருளாதாரத்தில் 
முற்றிலும் தோல்வி...

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்கும் குழுவின் தலைவரான மேனாள் ஒன்றிய  நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அங்கு செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் நாட்டின் பொருளா தார நிலைமை மிகவும் கவலைப் படத்தக்க அளவில் இருப்பதாக குறிப்பிட்டார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது:- பொருளாதாரத்தை பொறுத்த மட்டில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வி கண்டுள்ளது. நிலை மையை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியாமல் நிற்கிறது. விலை வாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அரசு தூண்டுகிறது. மாநிலங்களின் நிதி நிலைமை பலவீனமாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கான நடவடிக் கைகளை அவசரமாக எடுக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார பிரச்சி னையில் வெளிப்புற சூழ்நிலையும் சேர்ந்து கொண்டுள்ளது. இவற்றை யெல்லாம் எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசு நிற்கிறது.

விலைவாசி உயர்வுக்கு உக்ரைன் போரை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. எண்ணெய் விலை  அதிகளவில் உயர்ந்திருப்பதற்கும் உக்ரைன் போரை காரணமாக கூற முடியாது. ஏனென்றால் போருக்கு முன்பே இதே சூழல் நிலவியது. உக்ரைன் போர், நமக்குப் பிரச் சினைகளை சேர்த்திருக்கிறது. ஆனால், நாம் முன் கூட்டியே நட வடிக்கைகள் எடுத்திருக்க வேண் டும்.

சாக்கு போக்கு காரணம் கூடாது...

மொத்த விலை பணவீக்கமும், சில்லரை விலை பணவீக்கமும் கூடியதற்கு உக்ரைன் போர் போன்ற சாக்குபோக்கு காரணத் தைக் கூறிக் கொண்டிருக்கக்கூடாது என்று கருதுகிறேன்.

'இந்தியா ஒளிரும்' என்று கூறியதன் மற் றொரு நிகழ்வுதான், மோடி அரசு தற் போது செய்து கொண்டிருப்பது ஆகும். மோடி அரசின் மிகைப்படுத்தலை முறி யடிக்கிற பொருளாதார திட்ட வரை படத்தை நாங்கள் முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம்.

1991-ஆம் ஆண்டு தாராளமய மாக்கலின் புதிய சகாப்தத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு வழி வகுத்தது. செல்வம், புதிய தொழில்கள், புதிய தொழில் அதிபர்கள், பெரிய அளவிலான நடுத்தர வர்க்கம், பல லட்சம் வேலைகள், ஏற்றுமதிகள், 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து  வெளியேற்றம் என நாடு மகத்தான பலன்களை அடைந்தது.

மறுசீரமைப்பு மூலம் தீர்வு

30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உலகமும், இந்தியாவும் மாறி உள்ள நிலை யில், அதற்கு ஏற்ற வகையில் பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.

அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வுகள், அடிமட்டத்தில் உள்ள 10 சதவீத மக்க ளிடையே அளவு கடந்த வறுமை, உலக ளாவிய பட்டினி குறியீட்டின் இந்தியாவின் தரவரிசை (116 நாடுகளில் 101-ஆவது நிலையில் இந்தியா), பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறை பாடு போன்ற பிரச்சினைகளுக்கு பொருளாதார கொள்கைகளில் செய்யும் மறு சீரமைப்பு மூலம் தீர்வு காண வேண் டும்.

பொருளாதார கொள்கைகளின் மறுசீரமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி விளைவுகளை பாதிக்கும் என் பது எங்களது நம்பிக்கை ஆகும்.

ஜி.எஸ்.டி. விவகாரம்

மோசமாக தயாரிக்கப்பட்டு, நியாய மற்ற முறையில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) விளைவுகளை நாம் அனைவரும் அறி வோம். ஒன்றிய, மாநிலங்களின் நிதி உறவு களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் மாநி லங்களின் நிதி நிலைமை பலவீனமாக உள்ளது. அதை சரிசெய்ய அவசர நட வடிக்கைகள் தேவைப்படுகின்றன. ஒன்றிய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே நம்பிக்கை இல்லாத நிலை இருக்கிறது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டு காலத்தை 3 ஆண்டு களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாநில அரசுகளிட மிருந்து ஒருமனதாக வந்துள்ளது.

தற்போதைய அரசின் அடையாளம்

தானியங்கி, ரோபோ, எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அதிகளவில் பயன் படுத்தி, 21-ஆம் நூற் றாண்டில் தொழில், வர்த்தகம் ஆகிய வற்றை நடத்தும் வழிகளுக்கு ஏற்ப இந்திய பொருளாதாரமும், இந்திய உழைக் கும் வர்க்கத்தினரும் தயாராக வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் பொருளா தாரத்தின் மெதுவான வளர்ச்சிவிகிதம், தற்போதைய அரசின் அடையாளம் ஆகும். கரோனா பெருந்தொற்றுக்கு பிந் தைய மீட்பு அலட்சியமாகவும், இடை நிறுத்த மாகவும் உள்ளது.

பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர உதவுகிற கொள்கை நடவடிக்கை களின் திட்ட வரைபடத்துடன் காங்கிரஸ் வருமா என்று கேட்கி றீர்கள். இந்த அரசு யாருடைய பேச்சுக்கும் செவி சாய்ப்பதில்லை.

நாட்டின் நலன்களுக்கு ஏற்ற கொள்கைகளை நாங்கள் உரு வாக்குவோம். அதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment