மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள கைம்பெண் திருமணம் குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில ஏடு (13.5.2022) வெளியிட் டுள்ள செய்தியில் "தமிழ்நாட்டில் தந்தைபெரியார் 100 ஆண்டுகளுக்குமுன்னர் என்ன செய்தாரோ அது இன்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற் றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட தங்கை மகள் 7 வயது முத்தம்மாவுக்கு 12 வயது மண மகனைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவன் திடீரென அம்மை நோயால் இறந்து போனான். அப்போது முத்தம்மாவுக்கு 9 வயது. அவளுக்கு விதவைச் சடங்குகள் செய்தார்கள். செய்தி அறிந்த பெரியார் அந்த வீட்டுக்குப் போனார். முத்தம்மா அவரது காலைக் கட்டிக் கொண்டு அழுதாள். அப்போதே பெரியார் மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனது. அவளை சிதம் பரம் கோவிலைப் பார்க்கப் போவதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். ஒரு மணமகனை ஏற்பாடு செய்து, தன் நண்பர்கள் மூலமாக சிதம்பரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அந்த மணமக்களை தொடரியில் ஈரோட் டுக்கு வரவழைத்து, ஈரோடு தொடரி நிலையத்தில் இருந்து மேளதாளங்கள் ஏற்பாடு செய்து திரு மண ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தார். உறவினர்கள் கொதித்துப் போய் அவரை ஜாதியில் இருந்து நீக்கினார்கள். அவருக்கு யாரும் தண்ணீரும் நெருப்பும் கொடுக்கக் கூடாது. எந்தச் சடங்குக்கும் அவரை அழைக்கக் கூடாது என ஒதுக்கி வைத்தார்கள்.
1919 ஆம் ஆண்டு, பெரியார் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆகிவிட்டார். அதன்பிறகே அவரை ஜாதியில் மீண்டும் சேர்த்துக் கொண் டார்கள். பெரியார் கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததைக் கேள்விப்பட்ட ஒரு பார்ப் பனப் கைம்பெண், தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்ணுக்கு, அவரது ஜாதியிலேயே ஒரு மணமகனைத் தேடி, திருமணம் செய்து வைத்து வரலாறு படைத்தார் பெரியார்.
அதன்பிறகு, தந்தை பெரியாரின் பரப்புரை களின் விளைவாக, தமிழ்நாட்டில் கைம் பெண்கள் மறுவாழ்வு பெறத் தொடங்கினர். இது தமிழ்நாட்டில் நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட் டத்தில், ஹெர்வட் (Herwad) என்ற கிராமத்தில், இனி கணவன் இறந்தால், பெண்களின் நெற்றிப் பொட்டை அழிக்கக்கூடாது, வளையல்களை உடைக்கக் கூடாது, வெள்ளைச் சேலை கட்டக் கூடாது என, கிராமசபை தீர்மானம் நிறை வேற்றியது. அதேபோல, மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என, மராட்டிய அரசு ஆணை பிறப்பித்தது. மராட்டியத்தின் கிழக்கே விதர்பா பகுதியில் முதன்முதலாக, பல கிராமங் கள் அந்த வழியில் தீர்மானம் நிறைவேற்றி வரு கின்றன.
வாசிம் மாவட்டத்தில், மாலேகான் வட்டத்தில் தோர்கேடா என்ற கிராமம், (விதர்பாவில்) இந்த வழக்கத்தை ஒழித்த முதல் கிராமம் என்ற பெயரைப் பெற்றது.
தகவல்: தோழர் அருணகிரி
No comments:
Post a Comment