(வெண்பா)
பேணி நாம் “கற்போம் பெரியா ரியம்” தன்னை
மாநிலத்தீர் ஏற்பீர் மனமுவந்து - நாநிலமும்
போற்றும் பெரியார் புகழ் சேர் வரலாற்றை
மாற்றமின்றித் தந்தார் மகிழ்ந்து!
கற்கண்டாய்த் தான் இனிக்கும் கட்டுரைகள் அத்துணையும்
பொற்குடமாம் கண்ணே நீ போற்றிடுக - விற்பன்னர்
ஆசிரியர் அய்யா அருமைசேர் வீரமணி
வாசிக்கத் தந்த நூலை வாழ்த்து!
நல்ல பெரியாரின் நற்திறனைக் காட்டுதற்கு
இல்லையம்மா வேறு நூல் இந்நூல் போல் - முல்லையே
ஏழிரண்டு நற்தலைப்பில் இந்நூலைத் தந்தவரை
வாழியவே என்று சொல்லி வாழ்த்து!
நீண்ட வரலாற்றை நில்லாது நாம் படிக்கத்
தூண்டுகிற பெட்டகமாம் தூயவளே - மாண்புசேர்
நல் வீர மணியய்யா நாட்டிற்குத் தந்த நூலை
எல்லாரும் கற்போம் இணைந்து!
முன்னூறு நன்கொடையில் முத்தான இந்நூலை
எண்ணிக் கொடுத்தவரை ஏற்றிடுக - பன்னூல்கள்
கற்றிட்ட நற்பயனைக் காட்டுகிற கேப்சூலாய் (சிணீஜீsuறீமீ)
அற்புதமாய்த் தந்தார் அறிந்து!
அய்யாவின் சாதனைகள் அத்துணையும் தான் சொல்லி
மெய்சிலிர்க்க வைத்திட்டார் மேன்மையுடன் - பொய்கலவா
நல்ல வரலாற்றை நாம் படிக்கத் தந்தவரை
வல்லவர் என்று தினம் வாழ்த்து!
- தேவத்தூர் அ.காந்தி
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment