40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரனார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரனார்

கோவை சிறை ..சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது தாக்கம் ஏற்படக் காரணமாக இருந்த சிறை அதிகாரி பெயர் மிஞ்ஜேல். ஜெனரல் டயர் போன்றே இரக்கமில்லாத ஆங்கிலேய அதிகாரி

..சி.யை சிறைக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றார். ..சி. க்கு சிறைக்குள் தனி அறை. எந்த ஒரு காற்றுக்கான ஜன்னல் கூட இல்லாத கழிப்பறையை போன்ற ஒரு அறை. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் ..சி.யை அடைத்து வைத்தனர்.

சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு ஆடை தந்திருக்கிறார்கள்.. அது கூட சாக்குப் பையை கிழித்து சணலால் கட்டப்பட்ட ஆடை போன்ற அமைப்பு.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, சிறையில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம் !

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் ..சி.

 அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த சிறை அதிகாரி மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் கருவியை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை. அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிசின் சுற்றுவதை  தடுத்துள்ளார்.

இதற்காக அந்த கைதியை அடித்து நொறுக்கினான் சிறை அதிகாரி மிஞ்ஜேல்..பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர். அதாவது மாட்டுக்கு பதில் ..சி. யை பூட்டினர். அதுவும் உச்சி வெயிலில். இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்.

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பிவணக்கம் அய்யாஎன்றார்.. அவ்வளவுதான், சிறைக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சினை செய்து விட்டான் அந்த சிறை அதிகாரி.

..சி. விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வழக்குரைஞர் பணியை தொடர முடியாத அளவுக்கு உரிமத்தை பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசிக் கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்து விட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!

இதைவிட கொடுமை, தன்னுடைய வழக்குரைஞர் உரிமத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வாதாடி உதவ வேண்டும் என்று ..சி.,  கேட்டதற்கு, மூத்த வழக்குரைஞரான ராஜாஜி மறுத்துவிட்டாராம். சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் ..சி..!

..சி. குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள்,  5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.

 எப்படியாவது ..சி.யிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்என்றும் சொல்லி உள்ளனர்.. மடல் மேல் மடல் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை காந்தியார், ..சி.க்கு தரவே இல்லையாம்.. “காந்தி கணக்குஎன்று நாம் சொல்கிறோமே. அது இதுதான்!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தி யிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!

இந்த நாட்டின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் ..சி. ஆனால், வஉசியின் வரலாற்றை மறைத்துவிட்டு வாஞ்சிநாதனை முக்கியப்படுத்தினர் - காரணம், ஜாதி.

1806இல் வேலூர் புரட்சியை அலட்சியப்படுத்திவிட்டு, 1857இல் வந்த சிப்பாய் கலகத்தை பெரிதுபடுத்த காரணம்  எப்பேர்ப்பட்ட தியாகத்தையே செய்திருந்தாலும், அதை தீர்மானிப்பது இந்திய அரசியலின்ஜாதிதான்..!

இனியாகிலும்வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!

 தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், இந்திய உப கண்டத்தில் யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment