தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2021) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "இ-முன்னேற்றம் " மற்றும் "தகவல் தொழில்நுட்ப நண்பன்' ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், "கீழடி - தமிழிணைய விசைப்பலகை " மற்றும் "தமிழி - தமிழிணைய ஒருங்குறி மாற்றி " ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் ஆலோசகர், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர், மின்னாளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் முதன்மைச் செயல் அலுவலர், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இணை முதன்மை செயல் அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Friday, October 22, 2021
தகவல் தொழில் நுட்பவியல் துறையின் இரண்டு வலைத்தளங்கள் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment