உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரியார் உலகத்திற்கு பெருந்தகையாளர் கு.அய்யாத்துரை ஒரு லட்சம் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் பெரியார் உலகத்திற்கு பெருந்தகையாளர் கு.அய்யாத்துரை ஒரு லட்சம் அறிவிப்பு!

உரத்தநாடு, செப்.14 உரத்த நாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.9 .2021 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

.திமுக துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், நெல்லுப்பட்டு தங்க ரமேசின்தாயார் இந்திராணி, ஊரட்சி மா. சாக்ரடீஸின் தாயார் மரகதம் ,ஒன்றிய செயலாளர் .இலக்குமணன் சகோதரர் முருகன், ஒக்கநாடு மேலையூர் சின்னையன்,   மாநில ..துணைத்தலைவர் கோபு.பழனிவேல் பாட்டியார் செல்லம்மாள்  ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது

அறிவுலக பேராசான் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தும்,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம் செய்தும் பெருமைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு சமூக நீதியின் சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டம் நன்றி தெரிவித்துக் கொண்டது .

பெரியார் உலகத்திற்கு அதிக அளவில் நன்கொடை திரட்டித் தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

அறிவாசான் தந்தை பெரியாரின் பெரு விருப்பத்தை நிறைவேற்ற அரைநூற்றாண்டு காலம் போராடி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கித் தந்த வணக்கத்திற்குரிய தமிழர் தலைவருக்கு கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டது .

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நூற்றி நாற்பத்து மூன்றாவது பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று இருசக்கர வாகனம் மூலம் இரண்டு பகுதிகளாக சென்று ஒன்றியம் முழுவதும் கழக கொடியேற்றுவது எனவும்,  வீடுதோறும் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொள்கை பெரு விழாவாக கொண்டாடி மகிழ்வதெனமும் தீர்மானிக்கப்பட்டது .

கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,  மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை,  பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் .அருணகிரி,  மாவட்ட விவசாய அணி செயலாளர்பூவை. ராமசாமி , மாவட்ட கலைத் துறை தலைவர்வெ. நாராயணசாமி,  ஒன்றிய தலைவர் . ஜெகநாதன் ஒன்றிய செயலாளர் .இலக்குமணன்,  ஒன்றிய அமைப்பாளர் மாநல். பரமசிவம், மண்டலஇளைஞரணி செயலாளர் பேரா. ராஜவேலு, நகரத் தலைவர்பேபி.ரெ.இரவி,  ஒன்றியப.. தலைவர்கு.நேரு,  பெரியார் நகர் உத்திராபதி ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசன்,  நகரத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் மாரிமுத்து,  மேற்குப் பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ் நெடுவைவெ.விமல்,  விவசாய அணி தலைவர் மா.மதியழகன், செயலாளர் அறிவரசு, ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக நகர செயலாளர் ரெ.ரஞ்சித் குமார் நன்றி கூறினார் .

மேல வன்னிப்பட்டு பெரியார் படிப்பகம் வளர்ச்சி நிதியாக ரூபாய் 5000த்தினை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் அவர்கள் ரஞ்சித்குமாரிடம்  வழங்கினார் .

பெரியார் பிறந்தநாள் விழா

செலவிற்கு நன்கொடை வழங்கி மகிழ்ந்தவர்கள்

கு.அய்யாத்துரை -5000

மாநல்.பரமசிவம்-5000

.செகநாதன் -2000/

.இலக்குமணன் -2000

கு.நேரு -1000

.உத்திராபதி -1000

.அருணகிரி -500

நா.இராமகிருட்டிணன்-1000

பேபி.ரெ.இரமேசு -1000

.மாரிமுத்து -1000

புலவர் இரா.மோகன்தாசு -1000

No comments:

Post a Comment