ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம்!

சென்னை, செப்.21 ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தையொட்டி, நேற்று (20.9.2021) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நுழைவு வாயிலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்  எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மக்கள் விரோத பா... அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மறுக்காதே! மறுக்காதே! ரத்து செய்ய மறுக்காதே! மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே!

மோடி அரசே! மோடி அரசே! உயருது! உயருது!  கேஸ் விலை உயருது! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து!  கேஸ் விலையைக் கட்டுப்படுத்து!

ஒன்றிய அரசே! மோடி அரசே! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து! பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து!

மோடி அரசால்... மோடி அரசால்....  பொருளாதாரச் சீரழிவுத் திண்டாட்டம் அதனால்... அதனால்.. வேலையில்லாத் திண்டாட்டம்!

மோடி அரசே! ஒன்றிய அரசே!  விற்காதே! விற்காதே! பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே!

ஆகிய முழக்கங்கள் உணர்ச்சிகரமாக இப்போராட்டத்தின் போது ஒலிக்கப்பட்டன.

பங்கேற்றோர்

இப்போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர்  பேராசிரியர் ..மங்கள முருகேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ..பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்,    திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகு, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் சி.காமராஜ்,  பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், கோ.வீ.இராகவன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வழக்குரைஞர்கள் வீரமணி, துரைசாமி, பகுத்தறிவாளர் கழக வடசென்னை அமைப்பாளர் .வெங்கடேசன், கூடுவாஞ்சேரி ராஜூ, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் ஜெஜெ நகர் ராஜேந்திரன், பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், திராவிட மாணவர் கழக தோழர்கள் மங்களபுரம் பார்த்திபன், செந்தமிழ் சேரன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர் தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி  மதுராந்தகம் கவுதமன், அண்ணா நகர் ஆகாஷ், வி.ரவிக்குமார், திராவிடர் மகளிர் பாசறை .மரகதமணி, கோடம்பாக்கம் கோடீஸ்வரி, 100ஆவது வட்ட திமுக பிரதிநிதி சதீஷ்குமார், அரும்பாக்கம் அருள்தாஸ், கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், மதுராந்தகம் நகரச் செயலாளர் அறிவுக் கடல் செல்வம், ஓட்டுநர்கள் ஆனந்த், மகேஷ், இளங்கோ  உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.

No comments:

Post a Comment