‘தமிழர் தந்தை‘ சி.பா. ஆதித்தனார் அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (27.9.2021) சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர்கள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.
Monday, September 27, 2021
சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment