இன்று நம் நாட்டு மக்கள் நிலை பூனை இருக்கும்நாட்டில் வாழ்வது போல் வாழ வேண்டிய நிலையாக ஆகி விட்டது. இது திருத்தமடைய வேண்டுமானால் அரசியல் கட்சிகள் ஏற்பட வேண்டிய நிலை இல்லாமலும், சட்டசபைத் தேர்தல் முறை இல்லாமலும் இருக்கத்தக்க ஓர் ஏக நாயகத் தன்மை ஏற்பட வேண்டும். ஏக நாயகத்தில் அதிகமான ஊழல், மோசடி, ஒழுக்கக்கேடு, நிதிக்கேடு முதலிய நடவடிக்கை கள் பெரிதும், இடம் பெற முடியாது. பொருள் கொள்ளை போவதோ, நாசப்படுத்துவதோ, பொறுப்பின்றிப் பல பேருக்குத் தாட்சண்யம் சலுகைக் காட்டி நீதி நேர்மை இல்லாமல் நடக்க வேண்டிய அவசியமோ ஏற்பட இடம் இருக்குமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment