மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின்கீழ் உள்ள முதுகலை மருத்துவச் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின்கீழ் உள்ள முதுகலை மருத்துவச் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்

ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக 1- - முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணைய வரைவு அறிக்கைக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதலமைச்சர் மு..ஸ்டாலின், ஒன்றிய சுகாதா ரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நேற்று (31.7.2021) அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது: தேசிய மருத்துவ ஆணை யம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். உங்கள் கவனத் திற்கும் கொண்டு வருகிறேன். இந்த வரைவு அறிக்கையின் நோக்கமே, முதுநிலை மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதே. மாநில அரசின் தற்போதைய முக்கிய பங்கு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்த வரைவு அறிக்கை வகுக்கப்பட்டிருப்பது கெட்டவாய்ப்பானது. பெரும் பாலான முதுநிலை இடங்களை உருவாக்க தங்கள் சொந்த வளங் களை மாநில அரசு பயன்படுத்தி உள்ளதை ஒன்றிய அரசும் தேசிய மருத்துவக் கவுன்சிலும்  பாராட்ட வேண்டும். இதனால் தான் தாங்கள் தொடர்ந்து மாநில உரிமைகளை பறிக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்

வரைவு அறிக்கையில் 11.2இல், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கும் ஒன்றிய அரசே ஒரே மாதிரியான கவுன்சிலிங் நடத்தும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடி யாது. இது, விதிமீறலும் ஆகும். இது, தேசிய மருத்துவ ஆணை யம் சட்டம், 2019, மெயின் பிரிவு 15இல் உள்ள விதிமுறைகளுக்கு முரணானது. இது மாநிலத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரம் என்று வெளிப்படையாக குறிப் பிடுகிறது. மாநில அளவில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங்கை மாநில அரசே நடத் தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட வரைவு விதிமுறைகளில் கூறப் பட்டுள்ளபடி, முதுநிலை படிப் புகளுக்கு நீட் தேர்வு நடத்தப் பட்டு வருவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வலுவான வழிமுறை உள்ளது

எனவே, வரைவு விதிமுறை கள் எங்கள் மாநில அரசின் கொள்கைக்கு முற்றிலும் மாறா னவையாக உள்ளது. எங்கள் மாநிலத்தில் முதுநிலை படிப் புக்கு விண்ணப்பிக்கும் மாண வர்களுக்கு மாநில அரசு ஒதுக் கீட்டில் எங்கள் மாநிலத்திற்குட் பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவத்தை ஊக்கு விக்கும் ஒரு வலுவான வழி முறையும் எங்களிடம் உள்ளது. எங்கள் பொது சுகாதாரத்துறை நன்கு செயல்படும் அடித்தளமாக முதுநிலை மாணவர்களுக்கு கிராமப்புறங்கள், மலை கிரா மங்கள் மற்றும் மிகவும் கடுமை யாக பகுதிகளில் மருத்துவ சேவை யாற்றுகின்றனர். இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட் டால், எங்களது மாநிலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். எனவே, கூட்டாட்சி தத்துவத் திற்கு எதிராக உள்ள இந்த வரைவு அறிக்கையை கடுமை யாக எதிர்க்கிறேன். எனவே, ஒன்றிய அரசின் இந்த முடிவை கைவிட்டு, மாநில ஒதுக்கீட்டில் உள்ள 50 விழுக்காடு இடங்க ளுக்கு மாநில அரசே கவுன்சிலிங் நடத்தும் முறை தொடர வேண்டும். இவ்வாறு மு..ஸ்டா லின் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment