‘‘ஊசிமிளகாய்'' : ஏமாற்றாதீர்.. ஏமாறாதீர்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

‘‘ஊசிமிளகாய்'' : ஏமாற்றாதீர்.. ஏமாறாதீர்..!

ஏமாறுவதும் - ஏமாற்றுவதும் பிரிக்கப்பட முடியாத இரட்டைக் குழந்தைகள் போலும்!

எவ்வளவு செய்திகள் நாளும் நாளேடுகளில், ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் வந்தாலும், மக்களுக்குள் பேராசை உணர்வு அவர்களை முதலீடு செய்த பிறகு பெருநஷ்டத்திற்கு ஆளாக்கி நடுத்தெருவில் அலைய விடுகிறது!

கும்பகோணத்தில் இரு சகோதரர் பிறப்பாலோ, படிப்பாலோ ‘‘தாழ்த்தப்பட்டவர்களும்'' அல்ல - ‘‘உயர்ந்தவர்கள்.'' கட்சி சின்னம் தாமரையை தங்கள் சட்டைக்கு மேலே போட்டு, தேசபக்தியின் தேஜஸை பாரதத் திருநாட்டிற்கே காட்டிய  பாரத மாதாவின் சற்புத்திரர்கள்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என்று பட்டப் பெயர் - பட்டுக்குஞ்சம்!

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி, கோடிக்கணக்கில் வாரிச் சுருட்டியுள்ளனர்!

3 மாதங்களில் - முதலீட்டாளர்களுக்குப் பெருந்தொகையாக அள்ளச் சுரக்கும்அமுத சுரபி' பணம் கொட்டும் என்று அளந்து,வாரி விட்டனர்; பணம் போட வரிசை(க்யூ)யில் நின்று ஏமாந்தவர் பலர் - கும்பகோணத்தில்.

அது மட்டுமா?

இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்க்குகோமாதா குலமாதா' கோசாலை - சங்கராச்சாரியார் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பா...  தத்துவ ஆதரவுடன் பசு மாடுகளை வாங்கி பராமரித்து, பெரும் பண்ணையம் செய்து - ஹெலிகாப்டரில் பாலை அனுதினமும் ஏற்றி சென்னைக்கோ, பெருநகரங்களுக்கோ அனுப்பிய பெரும் புள்ளிகளின் பெருவணிகம்!

இப்படி ஒருபில்டப்' கோமாதாக்களுக்குத் தீனிகூட இல்லாமல் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை தலையிட்டு, கோமாதாக்களை - மத வேறுபாடின்றி (பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் அல்லவா) காப்பாற்ற வேண்டியதாயிடுத்து!

பா... பிரமுகர்களான இந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவு - அவர்களின் குடும்பத்தினர் கைது - நிர்வாகிகள் கைது, பிறகு நேற்று  வேந்தன்பட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலே பறந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை - ‘அண்டர்கிரவுண்ட்' ஆள்களை எப்படியோ பிடித்துக் கைது செய்துள்ளனர்!

பார்ப்பான் பண்ணயம் கேட்பாரில்லை' என்பது பழைய பழமொழி.

அது இப்போது நடக்குமா? இப்போது கேட்பவர்கள் ஆட்சி உள்ளதே, சட்டம் தன் கடமையை முழு வீச்சில் செய்கிறது!

19 ஆம் தேதிவரை காவல்.

15 கோடி ரூபாயைப் போட்டு ஏமாந்த இஸ்லாமிய இணையர்களுக்கு எவ்வளவு திரும்ப வரும் என்பது கேள்விக்குறியே!

போட்ட பணம் ஓரளவாவது கிடைத்தால், அது ஆச்சரியக் குறி!

வந்தே ()மாத்தரம்!'

No comments:

Post a Comment