துணை ராணுவப்படைகளில் 'கான்ஸ்டபிள்' பதவியில் 25,271 இடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்., ) 7545, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.அய்.எப்.,) 8464, சகஷ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 3806, இந்தோ திபெத் எல்லை போலீஸ் (அய்.டி.பி.பி.,) 1431, ஆயுத ரிசர்வ் படை (ஏ.ஆர்.,) 3785, சிறப்பு எல்லைப்படை (எஸ்.எஸ்.எப்.,) 240 என மொத்தம் 25,271 இடம்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 1.8.2021 அடிப்படையில் 18 - 23 வயது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
உயரம்: ஆண் 170 செ.மீ., , பெண் 157 செ.மீ.,
தேர்ச்சி முறை: இணையதள எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு. மருத்துவ சோதனை. சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி தேர்வு மய்யங்களாக உள்ளன. இணைதளம் வாயிலாக தேர்வு நடைபெறும். ரூ. 100. பெண், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி நாள்: 31.8.2021
விபரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf
No comments:
Post a Comment