அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு அமைச்சர் துரைமுருகன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூலை 27 தமிழ் நாட்டில் அதிகளவில் தடுப் பணைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட் டத்தின் மூலம் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் பெறப் பட்ட மனுக்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங் கும் நிகழ்ச்சி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.7.2021) நடந் தது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அதன்பின் னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நேற்று வரை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது. தற்போது திறக் கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. கடைமடை வரை தேவையான தண் ணீர் காவிரியிலிருந்து திறந்துவிடப்படும்.

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கர் நாடக அரசு தெரிவித்து உள்ளது. அவர்கள் காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆகியவற்றை ஒரு போதும் மதித்ததில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப் பார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட் டது. தமிழ்நாட்டில் அதி களவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள் ளோம்.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர் ஆதாரம் பெருகும். கடந்த ஆட்சியில் குடிம ராமத்து பணிகள் முழு மையாக நடைபெற வில்லை. முறைப்படி நிதி ஒதுக்கப்பட்டு ஏரிகள் அனைத்தும் முழுவது மாக தூர்வாரப்படும். கடந்த காலங்களில் பல இடங்களில் கனிமவளங் கள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. கூடிய விரை வில் ஆதாரத்துடன் அவை வெளிபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு கொண்டு வரப்படுவதாக எடப் பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எந்தக் குறையும் சொல்ல முடி யாததால் தான் இல்லாத ஒன்றை சொல்லிக் கொண் டிருக்கிறார். இருட்டு அறை யில் கருப்பு பூனையை எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment