திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கரோனா பாதிப்பு

திருவனந்தபுரம், ஜூலை 21- கேரளமாநிலத்தில் கரோனாதொற்று பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட் டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திருச் சூர் அரசு மருத்துவக்கல் லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இங்கு பயிலும் மருத்துவ  மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட் டுக் கொண்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு  உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் கரோனா  பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு  கரோனா தொற்று பாதிப்பு இருப் பது தெரியவந்தது.

இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் 50 பேர் மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் மாண வர்கள் 10 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்கள் 10 பேரும் மகப்பேறு  மற் றும் அறுவை சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவர் களாக உள்ளனர். இதில் 39 மருத்துவ மாணவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள னர். அவர்களுக்கு மீண் டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத் துவ நிபுணர்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றால் பாதித்த 60 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இளநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை மருத் துவ வகுப்புகளை  ரத்து செய்து திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தங் கியுள்ள விடுதிகளை மூடு வது குறித்தும் ஆலோ சிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment