விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!

 தி.மு.. அரசில் ஊக்கத் தொகை அளிப்பு  தொடரட்டும் - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் இன்டர் காஸ்ட் கோட்டா 5% இட ஒதுக்கீடு அளித்து நாட்டையே சமத்துவபுரமாக ஆக்கட்டும்!


ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் களுக்கு அளிக்கப்பட்டு வந்த பரிசுத் தொகையை .தி.மு.. அரசும், ஒன்றிய அரசும் நிறுத்தியது தொடர்பாக - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி., தெரிவித்துள்ள அதிர்ச்சித் தகவலைச் சுட்டிக்காட்டி தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் அமைந் துள்ள தி.மு.. ஆட்சி இதனைக் கவனத்தில் கொள்வதோடு, நிறுத்தப்பட்ட பரிசுத் தொகையைத் தொடரவேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு (இன்டர் காஸ்ட் கோட்டா) 5 விழுக்காடு கல்வி - வேலை வாய்ப்பில் தனியே ஒதுக்கி, ஜாதி ஒழிப்புக்கு ஊக்கம் அளித்து நாடே சமத்துவபுரமாக திகழ ஆவன செய்யவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செய லாளரும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தோழர் ரவிக்குமார் எம்.பி., அவர்கள் நேற்று (10.6.2021) ஓர் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

ஜாதி ஒழிப்பை ஊக்கப்படுத்தாமல்...

1. நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஜாதி மறுப்பு - ‘‘கலப்புத் திருமணங்கள்'' - ஒரு லட்சத்திற்கும் மேல் நடைபெறும் நிலையில், அவர்களுக்குரிய பரிசுத் தொகையை ஒன்றிய அரசு 2500 வாழ்விணையர்களுக்குக்கூட வழங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அறவே வழங்காமல், ஜாதி ஒழிப்பை ஊக்கப்படுத்தாமல் ஓர் அரசு உள்ள நிலையே தொடர்கிறது.

2. ‘‘எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு அளித்து வந்த பரிசுத் தொகை, ஊக்கங்களை - எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த .தி.மு.. அரசு அறவே முடக்கிவிட்டது'' என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியதோடு, அதை மாற்றி புதிய தி.மு.. அரசும், முதலமைச்சர் அவர்களும் ஜாதி மறுப்பு - ‘‘கலப்புத் திருமணங்களை'' ஊக்குவித்து, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு லட்சியத்திற்கு உதவிடும் வகையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்து தருவதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல அறப்போராட்டங்களை நடத்திபல மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது

இந்தக் கருத்தை திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக, பல மாநாடுகளில் தீர்மானங்களாகவும் போட்டு, இதனை வலியுறுத்தி பல அறப்போராட்டங்களையும்கூட நடத்தி யுள்ளது. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இதனை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதுள்ள இட ஒதுக்கீடுபடி,

1. O.C. (Open Competition) என்பது அனைத்து ஜாதியினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் வாய்ப்பு.

2. S.C -. ஷெட்யூல்டு காஸ்ட்,  ஷி.ஜி.- பழங்குடியினர்

3. B.C. - பிற்படுத்தப்பட்டோர்

4. M.B.C. - மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

5. முஸ்லிம்கள் - பிற்படுத்தப்பட்டோர்  ஒதுக்கீடு

6. அருந்ததியர்கள் S.C. ஒதுக்கீடு

7. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியருக்குத் தனி ஒதுக்கீடு என்ற தற்காலிக ஏற்பாட்டின்படி - அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு.

 நாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்!

இப்படி பல உள்ள நிலையில், கணக்குத் துவக்குவதுபோல்,  I.C. (Inter Caste) Quota - கலப்புத் திருமணங்களுக்கான இட ஒதுக்கீடு 5 சதவிகிதம் என்பதாக வேலை வாய்ப்பிலும், கல்வி வாய்ப்பிலும் தந்தால், அறவழியில், அமைதிப் புரட்சியாக ‘‘ஜாதி ஒழிப்புப் பணி'' நடைபெற்று, நாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்.

அதைவிட முக்கியம், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக அமையக் கூடும்.

அதைவிட முக்கியம் - ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை ஆணவக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்றிட காவல் துறையில் ஒரு தனிப் பிரிவேக்யூ 

பிராஞ்ச்' போல அமைத்து, நுண்ணறிவுப் பிரிவினர் அக்குடும்பத்தின் உறவு நிலைபற்றிய தெளிவான கண்காணிப்பையும் நடத்திட்டால், பல்லாயிரக் கணக்கான ஆண்டு சமூகத்தின் - நாட்டின் கறைபடிந்த அவலமும் வெகுவாக மாறிடும்  நிலையும்

ஏற்படும்.

கூலிப்படைகளை வைத்து ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் தனிச் சட்டங்களையும் இயற்றிடுதலை தி.மு.. அரசு தனது லட்சிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி, தக்க நேரத்தில் செய்து முடிக்க முன்வரவேண்டும்.

புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும்!

தி.மு.. ஆட்சியின்மூலமே, அதுவும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும் என்பதை ஒரு முக்கிய வேண்டுகோளாக ஜாதி மறுப்புக்காக சிறைத் தண்டனை, உயிர்த் தியாகம், வாழ்க்கை வதிவுகள் முதலியவற்றை ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கானவர்கள் சார்பில் இதனை தி.மு.. அரசின் ஆழ்ந்த பரிசீலனைக்கு முன்வைக்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம் 

சென்னை      

11.6.2021             

No comments:

Post a Comment