பூணூல்களுக்கு ‘‘நெரி'' கட்டுகிறது பார்த்தீர்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

பூணூல்களுக்கு ‘‘நெரி'' கட்டுகிறது பார்த்தீர்களா?

சென்னையில் உள்ள பத்ம க்ஷோத்திரி என்ற ‘‘தகுதி திறமைக்குப்'' பேர் போன சி.பி.எஸ்.. பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்த இராஜகோபாலன் வரதாச்சாரி என்ற ஆசிரியர்மீது பல மாணவிகள் பாலியல் சீண்டல் மற்றும் மிகவும் கேவலமாக அவர்களிடம் நடந்துகொண்ட புகார்களுக்காக தமிழகக் காவல்துறை பாலியல் சீண்டல்குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறை மூலம் விசாரித்து, தக்க ஆதாரங்களுடன் ஆபாச குறுஞ்செய்திகளையும் மற்றவை செல்போனின் மூலமும், லேப்-டாப் கணினியில் பதிவு செய்து வைத்துள்ளதைக் கைப்பற்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு - நங்கநல்லூருக்குச் சென்று விசாரித்து, அவரைக் கைது செய்து - 15 நாள் காவலில் உள்ள நிலையில்,

அந்த ஆசிரியரின் குற்றங்கள் - லீலா விநோதங்கள் - பாலியல் வக்கிரங்கள்பற்றி மேலும் பழைய மாணவிகளும் பலர் புகார் அளிக்க முன்வந்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அதன் டிரஸ்டியாக பதவியிலிருந்து ஒய்.ஜி.மகேந்திரன், அவரது தங்கை போன்றவர்கள் இராஜினாமா கொடுத்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முந்தும் நிலையில்,

எதற்கும் சம்மன் இல்லாமல் ஆஜராகியே' பழக்கப்பட்ட அரசியல் புரோக்கரான சு.சுவாமி என்பவர், இதோ ஏதோ ஒருபிராமணப்' பள்ளிக் கூடத்தையும், அதில் வேலை பார்க்கும் அவாளையும் குறி வைத்து நடத்தப்படும் பழிவாங்கும் செயல் - இதற்கு ‘‘தி.மு.. - தி.. தூண்டுதல் உள்ளது'' என்று  வழக்கமான தனது பூணூல் புத்தியை, பாசத்தைக் கொட்டியுள்ளார்!

இதுவரை யாரும் அந்தக் கோணத்தில் அப்பிரச்சினையைப் பார்க்காத நிலையில், இப்போது இவாள் இப்படி ஒருவிஸ்வரூபம்' எடுப்பதாக மிரட்டுவது  - தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பது இப்போதாவது பலருக்கும் புரியவேண்டும்; புரிந்திருக்கும்!

கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், இமயமலையில் உள்ள பார்ப்பானுக்கு நெரி கட்டும்' என்றார்!

அது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

பள்ளிகளில்நிர்பயாக்கள்' உருவாக்கப்படக்கூடாது என்று எங்கும் பாலியல் சீண்டல்களைத் தடுக்க மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள்.

ஆரிய - திராவிடப் பார்வையை திராவிடர்கள் எவரும் உண்டாக்காதபோது, சு.சுவாமிகளும், அவரையொட்டியஅவாள் திருக்கூட்டமும்' இப்படிப் பேசுவது, கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியும் விசித்திரம் அல்லவா?

மனுதர்மத்தை முன்னிறுத்திபிராமணன்' குற்றம் செய்தால் விட்டுவிடலாம் - கொலை செய்தால்கூட உச்சிகுடுமியை சிறிது சிரைத்தால்போதும்; சூத்திரன் கொலை செய்தால் ‘‘சிரச் சேதம்'' செய்யவேண்டும்; (பார்ப்பனருக்கோ ‘‘சிகைச் சேதம்'' செய்தால் போதும்) என்ற மனுவின் நவீன அவதாரங்கள் - இனி அப்பள்ளிபற்றிய  அக்கிரகார ஆக்கிரமிப்பும் - பூணூல் திமிலங்கள் எப்படி பொதுச்சொத்தை தனிச் சொத்தாக்கிக் கொண்ட கதையும் விரிவாக அம்பலமாகும். நல்ல கைங்கர்ய திருப்பணியை ஸ்ரீமான் புரோக்கர் சாமி என்ற அரசியல் தரகர் செய்திட முன்வந்துள்ளதால்தான், பனிப் பாறையின் முனை மட்டுமல்லாமல், பனிப்பாறையே வெளியே வர மிக உதவிகரமாக இருக்கக் கூடும்!

ஸ்ரீமான் புரோக்கர் அய்யர்கள் உம்மை மாதிரிஅனுகூல சத்ரு' தமிழக அரசுக்கு யார் கிடைப்பார்கள்?

நமஸ்தே! வந்தனம், தந்தனம்!

தேங்க் யூ' சு.சுவாமி அவர்களே!

ஸ்ரீமான்' ராஜகோபாலன் வரதாச்சாரியை ஒரு வகையாக ஆக்கவேதான் உமது இந்த திடீர்ப் பிரவேசமா?

முன்பு .சிதம்பரத்திற்கு எதிராகவும், .இராசாவுக்கு எதிராகவும் சவால் விட்டு மூக்கறுபட்ட முப்புரியாரே - இதிலும் உம் கதை பழைய கதையாய்தான் முடியும் - வருக! வருக!!

No comments:

Post a Comment