கரோனா கொடுந்தொற்றின் கோரத் தாண்டவம் குறைந்தபாடில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் எதிர்கொண்டு வெற்றியடையச் செய்யும் ஆற்றல் அறிவியலுக்கும், மக்களின் தன்னம்பிக்கைப் பொறுப்புடன் கடமையாற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கும் உண்டு.
இந்நிலையில்
பெரியார் மருத்துவ அணியின் ‘டெலிமெடிசன்' அறிவுரைகள் மூலம் - பாதிக்கப்பட்ட உறவினர்கள், தோழர்கள் மருத்துவ அறிவுரை பெறுவதற்கு - மருத்துவ அணி இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து தொண்டறம் புரிய முன்வந்திருப்பது எடுத்துக்காட்டானது.
பல
மருத்துவ மாமணிகளும் கூட இத்திட்டத்தில் மேலும் - அவர்களுடன் தொடர்பு கொண்டு இணைந்து, சேவையாற்ற முன்வரவேண்டும்.
தக்க
வகையில் மக்கள் பயன் பெறவும், இதன்மூலம் கவலை, அச்சத்தை, நோயைத் தடுக்க, போக்கவும் உதவட்டும்!
கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.5.2021
No comments:
Post a Comment