கரோனா கொடுந்தொற்று பெரியார் மருத்துவ அணியின் தொண்டறத் துவக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

கரோனா கொடுந்தொற்று பெரியார் மருத்துவ அணியின் தொண்டறத் துவக்கம்!

கரோனா கொடுந்தொற்றின் கோரத் தாண்டவம் குறைந்தபாடில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் எதிர்கொண்டு வெற்றியடையச் செய்யும் ஆற்றல் அறிவியலுக்கும், மக்களின் தன்னம்பிக்கைப் பொறுப்புடன் கடமையாற்றும் முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கும் உண்டு.

இந்நிலையில் பெரியார் மருத்துவ அணியின்டெலிமெடிசன்' அறிவுரைகள் மூலம் - பாதிக்கப்பட்ட உறவினர்கள், தோழர்கள் மருத்துவ அறிவுரை பெறுவதற்கு - மருத்துவ அணி இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து தொண்டறம் புரிய முன்வந்திருப்பது எடுத்துக்காட்டானது.

பல மருத்துவ மாமணிகளும் கூட இத்திட்டத்தில் மேலும் - அவர்களுடன் தொடர்பு கொண்டு இணைந்து, சேவையாற்ற முன்வரவேண்டும்.

தக்க வகையில் மக்கள் பயன் பெறவும், இதன்மூலம் கவலை, அச்சத்தை, நோயைத் தடுக்க, போக்கவும் உதவட்டும்!

 

கி. வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.5.2021

No comments:

Post a Comment