இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 16, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று நிலை

 புதுடில்லி, மே 16- இந்தியாவில்   கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 3.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால், உயிரிழப்பு 4 ஆயிரத் தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகா தாரத்துறை வெளியிட்ட அறி விப்பில் கூறப்பட்டு இருப்பதா வது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.   இதுவரை கரோனாவிலிருந்து 2 கோடியே 7 லட்சத்து 95ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 70 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

அய்சிஎம்ஆர்அறிவிப் பின்படி, இதுவரை 31 கோடியே 48 லட்சத்து 50 ஆயி ரத்து 143 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள் ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18லட்சத்து 32 ஆயி ரத்து 950 மாதிரிகள் பரிசோ திக்கப்பட்டுள்ளன''. இவ் வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment