குஜராத் மருத்துவமனையில் கோர தீ விபத்து -18 கரோனா நோயாளிகள் கருகிச் சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 2, 2021

குஜராத் மருத்துவமனையில் கோர தீ விபத்து -18 கரோனா நோயாளிகள் கருகிச் சாவு

அகமதாபாத், மே 2 குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட கோரத்தீ விபத்தில் 18 கரோனா நோயாளிகள் கருகி பலியாகினர்.

குஜராத் மாநிலம், ஆமதா பாத்தில் இருந்து 190 கி.மீ. தொலைவில் பாரூச் நகரில், பாரூச்-ஜம்புசார் நெடுஞ்சாலை யில் ஒரு அறக்கட்டளை அமைப் பின் மருத்துவமனை இயங்கி வரு கிறது. 4 மாடிகளை கொண்ட இந்த மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவமனையாக இயங்கி வருகிறது. மற்ற நோயாளிகள் சுமார் 50 பேரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், அந்த மருத் துவமனையின் கரோனா வார் டில் நேற்று (1.5.2021) அதிகாலை 1 மணியளவில் நோயாளிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வார்டில் திடீ ரென தீப்பிடித்து மளமளவென பரவத்தொடங்கியது. தீயின் வெம்மை தாங்காமல், தூங்கிக் கொண்டிருந்த கரோனா நோயா ளிகள் எழுந்து பார்த்து, தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அலறினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இந்த கோரத்தீ விபத்தில் 18 கரோனா நோயாளிகள் பலியா கினர். அவர்களில் பலர் உயி ரோடு எரிந்தும், கரும்புகையால் மூச்சு திணறியும் பலியாகினர். பலரது உடல்கள் கரிக்கட்டைகள் போல ஆகி விட்டன. அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, காலை 6.30 மணிக்கு கிடைத்த தகவல்படி இந்த கோரத் தீ விபத்தில் 18 பேர் பலியாகி இருப்பது தெரிய வந் துள்ளது என்றார்.

இந்த தீ விபத்துக்கான கார ணம் உடனடியாக தெரியவில்லை.

இந்த விபத்துக்கு பின்னர்

50 நோயாளிகள் அங்கிருந்து தீய ணைப்பு படையினராலும், உள் ளூர் மக்களாலும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள பிற மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர்.

காலைப்பொழுது விடிந்ததும் இந்தத் தீ விபத்து பற்றிய தகவல் அந்த நகரம் முழுவதும் காட்டு தீயாகப் பரவியது. அங்கு சேர்க் கப்பட்டிருந்த நோயாளிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு குவிந்தனர். அந்தக் காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது.

நோயாளிகள் படுக்கைகளி லும், ஸ்ட்ரெச்சர்களிலும் உயிரு டன் எரிந்து கரிக்கட்டைகளாகி இருந்தது காண்போரை உலுக் கியது. இந்த துயர சம்பவம் நிகழ்ந் ததற்கு மருத்துவர் நிர்வாகம்தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டினர்.

No comments:

Post a Comment